ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை!
Sep 12, 2026, 09:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 4, 2024, 04:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே சுமார் 3 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இப்போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆகவே, செங்கடலில் செல்லும் இஸ்ரேலுக்குச் சொந்தமான கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஹௌதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், தற்போது செங்கடலில் செல்லும் அனைத்துக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தினர். எனினும், இந்திய போர்க்கப்பல்கள் விரைந்து சென்று அக்கப்பலை பாதுகாப்பாக மீட்டு மும்பை துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. இதேபோல, பல்வேறு நாட்டுக் கப்பல்கள் மீதும் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர்க்கப்பலை செங்கடல் பகுதியில் நிலை நிறுத்தி இருக்கிறது. இக்கப்பல் மூலம் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அமெரிக்கா நடுவானிலேயே தடுத்து அழித்து வருகிறது. இதுபோல் பல ஏவுகணை அழித்திருக்கிறது.

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, செங்கடலில் வந்த கப்பல் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். ஆனால், அந்த ஏவுகணை மற்றும் ட்ரோன்களை அமெரிக்கா தடுத்து அழித்து விட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள் 4 படகுகளில் வந்து அக்கப்பலை வழிமறித்தனர்.

இதையறிந்த அமெரிக்க போர்க்கப்பல் 3 படகுகளை தாக்கி அழித்தது. ஒரு படகு மட்டும் தப்பிச் சென்று விட்டது. அமெரிக்காவின் இத்தாக்குதலில் ஹௌவு கிளர்ச்சியாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இதனால், கோபமடைந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள் இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்த வேண்டும். இல்லையெனில் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.

அதேசமயம், தாக்குதல் தொடர்ந்தால் எந்தவிதமான பதிலடியில் ஈடுபடும் என்பது குறித்து அமெரிக்க உயர் அதிகாரி தெரிவிக்க மறுத்து விட்டார். ஆனாலும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளிடம் இருந்து ஹௌதி கிளார்ச்சியாளர்கள் மற்றொரு எச்சரிக்கையை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பெல்ஜியம், கனடா, டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்றிணைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: americahouthi rebelswarning
Share
Tweet
SendShare
Previous Post

அலங்காநல்லூரில் ஜனவரி 17 ஜல்லிக்கட்டு!

Next Post

சென்னையில் பரவலாக மழை!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies