ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை!
Jul 29, 2026, 02:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 4, 2024, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே சுமார் 3 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இப்போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆகவே, செங்கடலில் செல்லும் இஸ்ரேலுக்குச் சொந்தமான கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஹௌதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், தற்போது செங்கடலில் செல்லும் அனைத்துக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தினர். எனினும், இந்திய போர்க்கப்பல்கள் விரைந்து சென்று அக்கப்பலை பாதுகாப்பாக மீட்டு மும்பை துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. இதேபோல, பல்வேறு நாட்டுக் கப்பல்கள் மீதும் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர்க்கப்பலை செங்கடல் பகுதியில் நிலை நிறுத்தி இருக்கிறது. இக்கப்பல் மூலம் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அமெரிக்கா நடுவானிலேயே தடுத்து அழித்து வருகிறது. இதுபோல் பல ஏவுகணை அழித்திருக்கிறது.

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, செங்கடலில் வந்த கப்பல் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். ஆனால், அந்த ஏவுகணை மற்றும் ட்ரோன்களை அமெரிக்கா தடுத்து அழித்து விட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள் 4 படகுகளில் வந்து அக்கப்பலை வழிமறித்தனர்.

இதையறிந்த அமெரிக்க போர்க்கப்பல் 3 படகுகளை தாக்கி அழித்தது. ஒரு படகு மட்டும் தப்பிச் சென்று விட்டது. அமெரிக்காவின் இத்தாக்குதலில் ஹௌவு கிளர்ச்சியாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இதனால், கோபமடைந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள் இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்த வேண்டும். இல்லையெனில் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.

அதேசமயம், தாக்குதல் தொடர்ந்தால் எந்தவிதமான பதிலடியில் ஈடுபடும் என்பது குறித்து அமெரிக்க உயர் அதிகாரி தெரிவிக்க மறுத்து விட்டார். ஆனாலும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளிடம் இருந்து ஹௌதி கிளார்ச்சியாளர்கள் மற்றொரு எச்சரிக்கையை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பெல்ஜியம், கனடா, டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்றிணைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: americahouthi rebelswarning
ShareTweetSendShare
Previous Post

அலங்காநல்லூரில் ஜனவரி 17 ஜல்லிக்கட்டு!

Next Post

சென்னையில் பரவலாக மழை!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies