ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை!
Apr 29, 2026, 10:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 4, 2024, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே சுமார் 3 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இப்போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆகவே, செங்கடலில் செல்லும் இஸ்ரேலுக்குச் சொந்தமான கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஹௌதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், தற்போது செங்கடலில் செல்லும் அனைத்துக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தினர். எனினும், இந்திய போர்க்கப்பல்கள் விரைந்து சென்று அக்கப்பலை பாதுகாப்பாக மீட்டு மும்பை துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. இதேபோல, பல்வேறு நாட்டுக் கப்பல்கள் மீதும் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர்க்கப்பலை செங்கடல் பகுதியில் நிலை நிறுத்தி இருக்கிறது. இக்கப்பல் மூலம் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அமெரிக்கா நடுவானிலேயே தடுத்து அழித்து வருகிறது. இதுபோல் பல ஏவுகணை அழித்திருக்கிறது.

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, செங்கடலில் வந்த கப்பல் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். ஆனால், அந்த ஏவுகணை மற்றும் ட்ரோன்களை அமெரிக்கா தடுத்து அழித்து விட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள் 4 படகுகளில் வந்து அக்கப்பலை வழிமறித்தனர்.

இதையறிந்த அமெரிக்க போர்க்கப்பல் 3 படகுகளை தாக்கி அழித்தது. ஒரு படகு மட்டும் தப்பிச் சென்று விட்டது. அமெரிக்காவின் இத்தாக்குதலில் ஹௌவு கிளர்ச்சியாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இதனால், கோபமடைந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள் இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்த வேண்டும். இல்லையெனில் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.

அதேசமயம், தாக்குதல் தொடர்ந்தால் எந்தவிதமான பதிலடியில் ஈடுபடும் என்பது குறித்து அமெரிக்க உயர் அதிகாரி தெரிவிக்க மறுத்து விட்டார். ஆனாலும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளிடம் இருந்து ஹௌதி கிளார்ச்சியாளர்கள் மற்றொரு எச்சரிக்கையை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பெல்ஜியம், கனடா, டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்றிணைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: americahouthi rebelswarning
ShareTweetSendShare
Previous Post

அலங்காநல்லூரில் ஜனவரி 17 ஜல்லிக்கட்டு!

Next Post

சென்னையில் பரவலாக மழை!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies