நேபாளத்தில் இருந்து 10000 மெகவாட் மின்சாரம் ஒப்பந்தம்!
Jan 14, 2026, 08:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 நேபாளத்தில் இருந்து 10000 மெகவாட் மின்சாரம் ஒப்பந்தம்!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு 10000 மெகாவாட் மின்சாரம் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இரண்டு நாள் பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேபாளம் சென்றுள்ளார்.

தலைநகர் காத்மாண்டு சென்ற ஜெய்சங்கரை, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் என்.பி.சாத் விமான நிலையம் வந்து வரவேற்றார். இந்த பயணத்தின்போது இந்தியா – நேபாளம் கூட்டு ஆணையத்தின் 7-வது கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

இரு நாடுகளுக்கு இடையேயான அனைத்து இருதரப்பு உறவுகள் குறித்தும், ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய துறைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நேபாளத்தின் மறுசீரமைப்பு முயற்சிக்கு ரூ. 1,000 கோடி மானியமாக நேபாள-இந்தியா கூட்டுக் குழுவின் ஏழாவது கூட்டத்தின் போது, ​​வெளியுறவு அமைச்சர் மட்டத்தில் இந்தியா நேற்று அறிவித்ததுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி ராம் சந்திர பௌடல் மற்றும் பிரசண்டா என்று அழைக்கப்படும் பிரதமர் புஷ்ப கமல் தஹால் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

நேபாளம் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவிற்கு வழங்க ஒப்பந்தம் கையெத்தானது.

அதேபோல், நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமியால் உருவாக்கப்பட்ட நானோ செயற்கைக்கோள் சேவை ஒப்பந்தத்தை இரு தரப்பும் தொடங்கியுள்ளன. நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமி மற்றும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம், நேபாள மின்சார ஆணையம் மற்றும் இந்தியாவின் என்டிபிசி லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கான ஒத்துழைப்புக்கானது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக காத்மாண்டு போஸ்ட் இதழுக்கு பேட்டி அளித்திருந்த என்.பி. சாத், “இந்தியா உடன் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு, 30-க்கும் மேற்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறோம். குறிப்பாக, போக்குவரத்து, பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், மின்சாரம், நீர் வளம், கலாச்சாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Jai sankarnepal
ShareTweetSendShare
Previous Post

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies