தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும், 14 இரயில்களிள் ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து சேலம் இரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, உத்தர பிரதேசத்தில் நடக்கும் இரயில்வே தண்டவாள பணியால், தமிழகத்தில் இருந்து டெல்லி உட்பட வட மாநிலங்களுக்கு இயக்கப்படும், 14 இரயில்களின் இயக்கம் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் கேரளா விரைவு இரயில், வரும் ஜனவரி 27-ஆம் தேதி முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரம் – ஹர்ஜத் நிஜாமூதீன் வார விரைவு இரயில், ஜனவரி 9-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ஆம் தி வரை வரை ரத்து செய்யப்படுகிறது.
எர்ணாகுளம் – ஹர்ஜத் நிஜாமூதீன் வார விரைவு இரயில், ஜனவரி 6-ஆம் தேதி முதல், பிப்ரவரி 6-ஆம் தேதி வரை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது. கோவை – ஹர்ஜத் நிஜாமூதீன் வார விரைவு இரயில், ஜனவரி 21, 24, 28, 31-ல் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது.
மதுரை – சண்டிகர் வார இரயில், ஜனவரி 10-ஆம் தேதி முதல், பிப்ரவரி 5-ஆம் தேதி வரையும், கன்னியாகுமரி – ஸ்ரீமாதா வைஷ்ணவ் தேவி கத்ரா வார இரயில், ஜனவரி 12-ஆம் தேதி முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது.
திருநெல்வேலி – ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி கத்ரா வார இரயில், ஜனவரி 8 முதல், பிப்ரவரி 1 வரை இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.