மிக்ஜாம் புயல் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக 4 சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனையடுத்து 2023 டிசம்பர் 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த விடுமுறையை ஈடுசெய்ய 4 சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் 4 வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி ஜனவரி 6 மற்றும் 20ம் தேதிகளிலும், பிப்ரவரி 3 மற்றும் 17ம் தேதிகளிலும் பள்ளிகள் செயல்படும் என அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் கூறப்பட்டு உள்ளது. பொதுத்தேர்வு நெருங்குவதால் பாடங்களை முழுமையாக நடத்த ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.