அயோத்தி கோவில்: வெறும் 84 விநாடிகளில் இராமர் சிலை பிரதிஷ்டை!
Oct 25, 2025, 04:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி கோவில்: வெறும் 84 விநாடிகளில் இராமர் சிலை பிரதிஷ்டை!

Web Desk by Web Desk
Jan 5, 2024, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் சிலை பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழாவுக்காகக் குறிக்கப்பட்டுள்ள முகூர்த்த நேரம் வெறும் 84 நொடிகள் மட்டுமே என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் மதிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இதையொட்டி, அன்றைய தினம் பகல் 12 மணிக்கு, இராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கோவில் திறப்பு விழா ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இக்கும்பாபிஷேக விழாவை நாடே ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம், இந்த நிகழ்வு வெறும் நொடிப் பொழுது மட்டுமே நடத்தப்படவிருக்கிறது என்பதுதான் ஹைலைட்.

உண்மைதான். அயோத்தி இராமர் கோவில் சிலை பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழாவிற்காகக் குறிக்கப்பட்டுள்ள முகூர்த்த நேரம் வெறும் 84 நொடிகள் மட்டுமே. இந்த 84 நொடிகள் என்பது மிகவும் புனிதத்துவம் வாய்ந்த, மங்களகரமான நேரமாகும்.

இந்த புனிதமான முகூர்த்த நேரத்தை குறித்துக் கொடுத்தவர்கள் காசி நகரத்தின் தலைசிறந்த பண்டிதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிலை பிரதிஷ்டை நடைபெறுவதற்கு முன்பு யாகங்கள், சிறப்பு ஹோமங்கள் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற உள்ளன.

சிலை பிரதிஷ்டை முடிந்த பிறகு அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 4 வேதங்கள் மந்திரங்கள் ஓதப்பட்டு, மற்ற மத மடங்குகள் நடத்தப்பட உள்ளன.

இதுகுறித்து ஸ்ரீராமஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய் கூறுகையில், “அயோத்தி இராமா் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி பிற்பகல் 12.29.08 மணி முதல் 12.30.32 வரை 84 விநாடிகளில் இராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

16 பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது” என்று தெரிவித்தார்.

அயோத்தி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள குழந்தை இராமர் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மார்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.

ராமர் கோயிலில் ஜனவரி 23-ம் தேதி முதல் தரிசனத்துக்காக பக்தா்கள் அனுமதிக்கப்படுவார்கள். நாளொன்றுக்கு 3 லட்சம் பேர் வரை தரிசனம் மேற்கொள்ள வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Ram TempleAyodya
ShareTweetSendShare
Previous Post

உத்தரபிரதேசத்தில் 928 பள்ளிகள் முதற்கட்டமாக PM SHRI யோஜனா திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன!

Next Post

நாட்டில் பயோடெக் சுற்றுச்சூழல் அமைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது! – ஜிதேந்திர சிங்

Related News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies