அயோத்தி கோவில்: வெறும் 84 விநாடிகளில் இராமர் சிலை பிரதிஷ்டை!
Jan 14, 2026, 05:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி கோவில்: வெறும் 84 விநாடிகளில் இராமர் சிலை பிரதிஷ்டை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 5, 2024, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் சிலை பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழாவுக்காகக் குறிக்கப்பட்டுள்ள முகூர்த்த நேரம் வெறும் 84 நொடிகள் மட்டுமே என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் மதிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இதையொட்டி, அன்றைய தினம் பகல் 12 மணிக்கு, இராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கோவில் திறப்பு விழா ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இக்கும்பாபிஷேக விழாவை நாடே ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம், இந்த நிகழ்வு வெறும் நொடிப் பொழுது மட்டுமே நடத்தப்படவிருக்கிறது என்பதுதான் ஹைலைட்.

உண்மைதான். அயோத்தி இராமர் கோவில் சிலை பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழாவிற்காகக் குறிக்கப்பட்டுள்ள முகூர்த்த நேரம் வெறும் 84 நொடிகள் மட்டுமே. இந்த 84 நொடிகள் என்பது மிகவும் புனிதத்துவம் வாய்ந்த, மங்களகரமான நேரமாகும்.

இந்த புனிதமான முகூர்த்த நேரத்தை குறித்துக் கொடுத்தவர்கள் காசி நகரத்தின் தலைசிறந்த பண்டிதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிலை பிரதிஷ்டை நடைபெறுவதற்கு முன்பு யாகங்கள், சிறப்பு ஹோமங்கள் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற உள்ளன.

சிலை பிரதிஷ்டை முடிந்த பிறகு அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 4 வேதங்கள் மந்திரங்கள் ஓதப்பட்டு, மற்ற மத மடங்குகள் நடத்தப்பட உள்ளன.

இதுகுறித்து ஸ்ரீராமஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய் கூறுகையில், “அயோத்தி இராமா் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி பிற்பகல் 12.29.08 மணி முதல் 12.30.32 வரை 84 விநாடிகளில் இராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

16 பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது” என்று தெரிவித்தார்.

அயோத்தி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள குழந்தை இராமர் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மார்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.

ராமர் கோயிலில் ஜனவரி 23-ம் தேதி முதல் தரிசனத்துக்காக பக்தா்கள் அனுமதிக்கப்படுவார்கள். நாளொன்றுக்கு 3 லட்சம் பேர் வரை தரிசனம் மேற்கொள்ள வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Ram TempleAyodya
ShareTweetSendShare
Previous Post

உத்தரபிரதேசத்தில் 928 பள்ளிகள் முதற்கட்டமாக PM SHRI யோஜனா திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன!

Next Post

நாட்டில் பயோடெக் சுற்றுச்சூழல் அமைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது! – ஜிதேந்திர சிங்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies