அயோத்தி கோவில்: வெறும் 84 விநாடிகளில் இராமர் சிலை பிரதிஷ்டை!
Apr 29, 2026, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி கோவில்: வெறும் 84 விநாடிகளில் இராமர் சிலை பிரதிஷ்டை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 5, 2024, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் சிலை பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழாவுக்காகக் குறிக்கப்பட்டுள்ள முகூர்த்த நேரம் வெறும் 84 நொடிகள் மட்டுமே என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் மதிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இதையொட்டி, அன்றைய தினம் பகல் 12 மணிக்கு, இராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கோவில் திறப்பு விழா ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இக்கும்பாபிஷேக விழாவை நாடே ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம், இந்த நிகழ்வு வெறும் நொடிப் பொழுது மட்டுமே நடத்தப்படவிருக்கிறது என்பதுதான் ஹைலைட்.

உண்மைதான். அயோத்தி இராமர் கோவில் சிலை பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழாவிற்காகக் குறிக்கப்பட்டுள்ள முகூர்த்த நேரம் வெறும் 84 நொடிகள் மட்டுமே. இந்த 84 நொடிகள் என்பது மிகவும் புனிதத்துவம் வாய்ந்த, மங்களகரமான நேரமாகும்.

இந்த புனிதமான முகூர்த்த நேரத்தை குறித்துக் கொடுத்தவர்கள் காசி நகரத்தின் தலைசிறந்த பண்டிதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிலை பிரதிஷ்டை நடைபெறுவதற்கு முன்பு யாகங்கள், சிறப்பு ஹோமங்கள் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற உள்ளன.

சிலை பிரதிஷ்டை முடிந்த பிறகு அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 4 வேதங்கள் மந்திரங்கள் ஓதப்பட்டு, மற்ற மத மடங்குகள் நடத்தப்பட உள்ளன.

இதுகுறித்து ஸ்ரீராமஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய் கூறுகையில், “அயோத்தி இராமா் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி பிற்பகல் 12.29.08 மணி முதல் 12.30.32 வரை 84 விநாடிகளில் இராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

16 பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது” என்று தெரிவித்தார்.

அயோத்தி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள குழந்தை இராமர் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மார்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.

ராமர் கோயிலில் ஜனவரி 23-ம் தேதி முதல் தரிசனத்துக்காக பக்தா்கள் அனுமதிக்கப்படுவார்கள். நாளொன்றுக்கு 3 லட்சம் பேர் வரை தரிசனம் மேற்கொள்ள வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Ram TempleAyodya
ShareTweetSendShare
Previous Post

உத்தரபிரதேசத்தில் 928 பள்ளிகள் முதற்கட்டமாக PM SHRI யோஜனா திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன!

Next Post

நாட்டில் பயோடெக் சுற்றுச்சூழல் அமைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது! – ஜிதேந்திர சிங்

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies