அமெரிக்க எச்சரிக்கை நிராகரிப்பு: ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் அத்துமீறல்!
Mar 15, 2026, 09:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க எச்சரிக்கை நிராகரிப்பு: ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் அத்துமீறல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 5, 2024, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால், இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இதையும் மீறி வெடிபொருள் அடங்கிய படகை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் வெடிக்கச் செய்திருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையே கடந்த 3 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இப்போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

எனவே, செங்கடலில் செல்லும் இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், செங்கடல் வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்கள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, இத்தாக்குதலை தடுக்கும் வகையில், செங்கடலில் அமெரிக்கா தனது போர்க் கப்பல்கள் நிலைநிறுத்தி இருக்கிறது. இதன் மூலம், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் செலுத்தும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருகிறது. இதேபோல, ஏராளமான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழித்திருக்கிறது.

மேலும், செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லையெனில், இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்கா தலைமையிலான 12 நாடுகள் கொண்ட கூட்டுப்படை இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

அதாவது, ஏமனில் இருந்து ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களுடன் ஆளில்லா படகு ஒன்றை அனுப்பினர். இந்தப் படகை அமெரிக்கா கடற்படை மற்றும் செங்கடலில் பயணித்த வணிகக் கப்பல்கள் இருந்த 2 மைல் பகுதிக்குள் வெடிக்கச் செய்தனர்.

எனினும், இத்தாக்குதலில் எந்த சேதமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்க கடற்படை தெரிவித்திருக்கிறது.

Tags: houthi rebelsDefyUS Warning
ShareTweetSendShare
Previous Post

ஹைட்ரோகார்பன் துறையில் இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்! – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Next Post

இராமர் பக்தி பாடலை பகிர்ந்த பிரதமர் மோடி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies