அமெரிக்க எச்சரிக்கை நிராகரிப்பு: ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் அத்துமீறல்!
Jun 18, 2025, 12:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க எச்சரிக்கை நிராகரிப்பு: ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் அத்துமீறல்!

Web Desk by Web Desk
Jan 5, 2024, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால், இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இதையும் மீறி வெடிபொருள் அடங்கிய படகை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் வெடிக்கச் செய்திருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையே கடந்த 3 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இப்போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

எனவே, செங்கடலில் செல்லும் இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், செங்கடல் வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்கள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, இத்தாக்குதலை தடுக்கும் வகையில், செங்கடலில் அமெரிக்கா தனது போர்க் கப்பல்கள் நிலைநிறுத்தி இருக்கிறது. இதன் மூலம், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் செலுத்தும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருகிறது. இதேபோல, ஏராளமான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழித்திருக்கிறது.

மேலும், செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லையெனில், இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்கா தலைமையிலான 12 நாடுகள் கொண்ட கூட்டுப்படை இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

அதாவது, ஏமனில் இருந்து ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களுடன் ஆளில்லா படகு ஒன்றை அனுப்பினர். இந்தப் படகை அமெரிக்கா கடற்படை மற்றும் செங்கடலில் பயணித்த வணிகக் கப்பல்கள் இருந்த 2 மைல் பகுதிக்குள் வெடிக்கச் செய்தனர்.

எனினும், இத்தாக்குதலில் எந்த சேதமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்க கடற்படை தெரிவித்திருக்கிறது.

Tags: houthi rebelsDefyUS Warning
ShareTweetSendShare
Previous Post

ஹைட்ரோகார்பன் துறையில் இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்! – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Next Post

இராமர் பக்தி பாடலை பகிர்ந்த பிரதமர் மோடி!

Related News

இந்தியாவின் ராஜ தந்திரம் வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா?

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies