அமெரிக்க எச்சரிக்கை நிராகரிப்பு: ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் அத்துமீறல்!
Jul 29, 2026, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க எச்சரிக்கை நிராகரிப்பு: ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் அத்துமீறல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 5, 2024, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால், இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இதையும் மீறி வெடிபொருள் அடங்கிய படகை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் வெடிக்கச் செய்திருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையே கடந்த 3 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இப்போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

எனவே, செங்கடலில் செல்லும் இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், செங்கடல் வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்கள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, இத்தாக்குதலை தடுக்கும் வகையில், செங்கடலில் அமெரிக்கா தனது போர்க் கப்பல்கள் நிலைநிறுத்தி இருக்கிறது. இதன் மூலம், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் செலுத்தும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருகிறது. இதேபோல, ஏராளமான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழித்திருக்கிறது.

மேலும், செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லையெனில், இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்கா தலைமையிலான 12 நாடுகள் கொண்ட கூட்டுப்படை இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

அதாவது, ஏமனில் இருந்து ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களுடன் ஆளில்லா படகு ஒன்றை அனுப்பினர். இந்தப் படகை அமெரிக்கா கடற்படை மற்றும் செங்கடலில் பயணித்த வணிகக் கப்பல்கள் இருந்த 2 மைல் பகுதிக்குள் வெடிக்கச் செய்தனர்.

எனினும், இத்தாக்குதலில் எந்த சேதமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்க கடற்படை தெரிவித்திருக்கிறது.

Tags: houthi rebelsDefyUS Warning
ShareTweetSendShare
Previous Post

ஹைட்ரோகார்பன் துறையில் இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்! – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Next Post

இராமர் பக்தி பாடலை பகிர்ந்த பிரதமர் மோடி!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies