அமெரிக்க எச்சரிக்கை நிராகரிப்பு: ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் அத்துமீறல்!
Sep 12, 2026, 09:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க எச்சரிக்கை நிராகரிப்பு: ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் அத்துமீறல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 5, 2024, 03:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால், இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இதையும் மீறி வெடிபொருள் அடங்கிய படகை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் வெடிக்கச் செய்திருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையே கடந்த 3 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இப்போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

எனவே, செங்கடலில் செல்லும் இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், செங்கடல் வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்கள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, இத்தாக்குதலை தடுக்கும் வகையில், செங்கடலில் அமெரிக்கா தனது போர்க் கப்பல்கள் நிலைநிறுத்தி இருக்கிறது. இதன் மூலம், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் செலுத்தும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருகிறது. இதேபோல, ஏராளமான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழித்திருக்கிறது.

மேலும், செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லையெனில், இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்கா தலைமையிலான 12 நாடுகள் கொண்ட கூட்டுப்படை இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

அதாவது, ஏமனில் இருந்து ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களுடன் ஆளில்லா படகு ஒன்றை அனுப்பினர். இந்தப் படகை அமெரிக்கா கடற்படை மற்றும் செங்கடலில் பயணித்த வணிகக் கப்பல்கள் இருந்த 2 மைல் பகுதிக்குள் வெடிக்கச் செய்தனர்.

எனினும், இத்தாக்குதலில் எந்த சேதமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்க கடற்படை தெரிவித்திருக்கிறது.

Tags: houthi rebelsDefyUS Warning
Share
Tweet
SendShare
Previous Post

ஹைட்ரோகார்பன் துறையில் இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்! – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Next Post

இராமர் பக்தி பாடலை பகிர்ந்த பிரதமர் மோடி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies