வாழ்வா ? சாவா ? என்ற நிலையில் உள்ளோம் - ஹாக்கி மகளிர் அணி கேப்டன்!
Jan 14, 2026, 08:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாழ்வா ? சாவா ? என்ற நிலையில் உள்ளோம் – ஹாக்கி மகளிர் அணி கேப்டன்!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒலிம்பிக் போட்டியில் தகுதி சுற்று ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கவுள்ளதைக் குறித்து இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் சவிதா கூறியுள்ளார்.

2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது. இதில் மகளிர் ஹாக்கி போட்டிக்கான தகுதி சுற்று வரும் ஜனவரி 13 முதல் 19ஆம் தேதி வரை ராஞ்சியில் நடைபெற உள்ளது.

இதில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ‘பி’பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இத்தாலி, அமெரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஜெர்மனி, ஜப்பான், சிலி, செக் குடியரசு ஆகிய அணிகள் உள்ளன.

இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜனவரி 13ஆம் தேதி அமெரிக்காவுடன் விளையாடுகிறது. 14ஆம் தேதி நியூசிலாந்துடனும், 16ஆம் தேதி இத்தாலியுடனும் விளையாடவுள்ளது.

முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறும். இதனால் இந்திய மகளிர் அணிக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெறும் ஜார்கண்ட் மைதானத்தில், இதற்கு முன்னர் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் இது எங்களுக்கு வாழ்வா சாவா என்ற ஆட்டம் என்று இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் சவிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர், “நமது அணி மிகவும் உற்சாகமாக உள்ளது. ஜார்கண்டில் சில நல்ல பயிற்சிகள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. குறிப்பாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது அணிக்குக் கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது. நாங்கள் இதற்காகக் கடுமையான பயிற்சிகளுடன் தயாராகி உள்ளோம்.

மேலும் கடந்த காலங்களில் ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட வீராங்கனைகள் அணியில் உள்ளார்கள். அவர்கள் மூலம் இந்த தொடரில் எவ்வாறு செயல்பட்டால் வெற்றி பெற முடியும் என்பதை நாங்கள் கற்றுள்ளோம். இது எங்களுக்கு வாழ்வா சாவா ஆட்டம் ஆகும். நாங்கள் அதற்குத் தயாராக உள்ளோம்” என்று கூறினார்.

Tags: indian hockey teamindian womens hockey teamindian womens hockey team captain
ShareTweetSendShare
Previous Post

‘மொஹல்லா கிளினிக்குகள்’ மீதான ஊழல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ. நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

Next Post

சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரை பட்டியல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies