வாழ்வா ? சாவா ? என்ற நிலையில் உள்ளோம் - ஹாக்கி மகளிர் அணி கேப்டன்!
Jul 23, 2025, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாழ்வா ? சாவா ? என்ற நிலையில் உள்ளோம் – ஹாக்கி மகளிர் அணி கேப்டன்!

Web Desk by Web Desk
Jan 5, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒலிம்பிக் போட்டியில் தகுதி சுற்று ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கவுள்ளதைக் குறித்து இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் சவிதா கூறியுள்ளார்.

2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது. இதில் மகளிர் ஹாக்கி போட்டிக்கான தகுதி சுற்று வரும் ஜனவரி 13 முதல் 19ஆம் தேதி வரை ராஞ்சியில் நடைபெற உள்ளது.

இதில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ‘பி’பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இத்தாலி, அமெரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஜெர்மனி, ஜப்பான், சிலி, செக் குடியரசு ஆகிய அணிகள் உள்ளன.

இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜனவரி 13ஆம் தேதி அமெரிக்காவுடன் விளையாடுகிறது. 14ஆம் தேதி நியூசிலாந்துடனும், 16ஆம் தேதி இத்தாலியுடனும் விளையாடவுள்ளது.

முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறும். இதனால் இந்திய மகளிர் அணிக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெறும் ஜார்கண்ட் மைதானத்தில், இதற்கு முன்னர் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் இது எங்களுக்கு வாழ்வா சாவா என்ற ஆட்டம் என்று இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் சவிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர், “நமது அணி மிகவும் உற்சாகமாக உள்ளது. ஜார்கண்டில் சில நல்ல பயிற்சிகள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. குறிப்பாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது அணிக்குக் கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது. நாங்கள் இதற்காகக் கடுமையான பயிற்சிகளுடன் தயாராகி உள்ளோம்.

மேலும் கடந்த காலங்களில் ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட வீராங்கனைகள் அணியில் உள்ளார்கள். அவர்கள் மூலம் இந்த தொடரில் எவ்வாறு செயல்பட்டால் வெற்றி பெற முடியும் என்பதை நாங்கள் கற்றுள்ளோம். இது எங்களுக்கு வாழ்வா சாவா ஆட்டம் ஆகும். நாங்கள் அதற்குத் தயாராக உள்ளோம்” என்று கூறினார்.

Tags: indian hockey teamindian womens hockey teamindian womens hockey team captain
ShareTweetSendShare
Previous Post

‘மொஹல்லா கிளினிக்குகள்’ மீதான ஊழல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ. நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

Next Post

சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரை பட்டியல்!

Related News

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies