இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 : இந்தியா அபார வெற்றி!
Oct 26, 2025, 05:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 : இந்தியா அபார வெற்றி!

Web Desk by Web Desk
Jan 6, 2024, 10:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்றப் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

அதில் முதல் டி20 போட்டி நேற்று மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலியா மகளிர் அணி 19வது ஓவர் முடிய 141 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 49 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் மற்றொரு வீராங்கனை எல்லிஸ் பெர்ரி 37 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பெத் மூனி 17 ரன்களும், அனாபெல் சதர்லேண்ட் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா மகளிர் அணி 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா அணியில் அதிகபட்சமாக டைட்டாஸ் சாது 17 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தார்.

இந்திய அணியின் ஸ்ரேயங்கா பட்டேல், தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் அமன்ஜோத் கவுர், ரேணுகா சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா, ஷாபாலி வர்மா களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே இருவரும் ஆதிக்ககம் செலுத்தி வந்த நிலையில் இருவரும் அரைசதம் எடுத்தனர். இந்திய அணி 137 ரன்கள் எடுத்து வெற்றி கோட்டை நெருங்கும் சமயத்தில் ஸ்மிருதி மந்தனா 54 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

18வது ஓவரில் இந்திய அணி 145 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஷாபாலி வர்மா 64 ரன்களும், ஜெமிமா 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா அணியில் ஜார்ஜியா வேர்ஹாம் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனால் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் இப்போட்டியில் ஆட்ட நாயகி விருது 17 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்திய இந்திய அணியின் வீராங்கனை சாதுவுக்கு வழங்கப்பட்டது.

Tags: indian womens cricket team won the match
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Next Post

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies