இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 : இந்தியா அபார வெற்றி!
Aug 5, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 : இந்தியா அபார வெற்றி!

Murugesan M by Murugesan M
Jan 6, 2024, 10:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்றப் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

அதில் முதல் டி20 போட்டி நேற்று மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலியா மகளிர் அணி 19வது ஓவர் முடிய 141 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 49 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் மற்றொரு வீராங்கனை எல்லிஸ் பெர்ரி 37 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பெத் மூனி 17 ரன்களும், அனாபெல் சதர்லேண்ட் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா மகளிர் அணி 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா அணியில் அதிகபட்சமாக டைட்டாஸ் சாது 17 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தார்.

இந்திய அணியின் ஸ்ரேயங்கா பட்டேல், தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் அமன்ஜோத் கவுர், ரேணுகா சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா, ஷாபாலி வர்மா களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே இருவரும் ஆதிக்ககம் செலுத்தி வந்த நிலையில் இருவரும் அரைசதம் எடுத்தனர். இந்திய அணி 137 ரன்கள் எடுத்து வெற்றி கோட்டை நெருங்கும் சமயத்தில் ஸ்மிருதி மந்தனா 54 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

18வது ஓவரில் இந்திய அணி 145 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஷாபாலி வர்மா 64 ரன்களும், ஜெமிமா 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா அணியில் ஜார்ஜியா வேர்ஹாம் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனால் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் இப்போட்டியில் ஆட்ட நாயகி விருது 17 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்திய இந்திய அணியின் வீராங்கனை சாதுவுக்கு வழங்கப்பட்டது.

Tags: indian womens cricket team won the match
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Next Post

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies