பெங்களூருவில், HAL நிறுவனத்தின் விண்வெளித் தொழிற்சாலையிலிருந்து இந்திய விமானப்படைக்கு இரண்டு FOC LCA பயிற்சி விமானங்கள் மற்றும் மூன்று HTT-40 பயிற்சி விமானங்கள் ஒப்படைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், HAL நிறுவனம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் நம்பகத்தன்மையை நிலைநாட்டியுள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.
அதேவேளையில், உள்நாட்டு பாதுகாப்புத் தளவாடங்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து கவலை தெரிவித்தார்.
குறிப்பாக, தாமதங்கள் செலவு அதிகரிப்புக்கும், தொழில்நுட்பங்கள் காலாவதியாகும் நிலைக்கும் வழிவகுக்கும் என அவர் கூறினார்.
இதனிடையே, இந்திய விமானப்படைக்கு HAL நிறுவனம் வழங்க வேண்டிய 180 தேஜஸ் MK1A விமானங்களின் விநியோகத்திலும், ஏவுகணை மற்றும் ரேடார் ஒருங்கிணைப்புச் சிக்கல்களால் காலதாமதம் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















