தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டத்தை முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 28 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளும் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், முதற்கட்டமாக ஒரு லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மோதிரத்திற்கும் தனித்துவமான வரிசை எண்ணும், சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் வழங்கப்பட உள்ளது
இதனிடையே, தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள், PICME-யில் பதிவு செய்து RCH அடையாள எண் பெற்றிருந்தால் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
அதேவேளையில், ஜூன் 22 முதல் திட்டம் தொடங்கும் நாள் வரை பிறந்த குழந்தைகளுக்கு, 107 மையங்களில் தினமும் 100 குழந்தைகள் வீதம் செப்டம்பர் 28 முதல் மோதிரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டம் தொடங்கிய பின்னர், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போதே தங்கமோதிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தாய்-சேய் நலப் பாதுகாப்புடன், அரசு மருத்துவமனைகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















