தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் என, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஏடிஜிபி காமராஜ், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
அவரது ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோரும் பாஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் பாஜக தேசிய செயலாளர் மா. வெங்கடேசன், மாநிலத் துணைத் தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், வி.பி. துரைசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,
இந்தியாவில் எத்தனை கட்சிகள் வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால் மக்களுக்காகச் சேவை செய்யும் ஒரே கட்சி பாஜகதான் என தெரிவித்தார்.
இந்தக் கட்சியில் குடும்ப அரசியல் கிடையாது என்றும் அவர் கூறினார்.தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
















