டெங்கு சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நடப்பாண்டில் காய்ச்சல் பாதிப்பு 16 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெங்கு பாதிப்பால் 9 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக 12 சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்துள்ளதாகக் கூறியுள்ளது.
இதனிடையே டெங்கு பாதிப்பை காரணம் காட்டி சில தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளதாகவும்
இந்த புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
மேலும், கூடுதல் கட்டண வசூலில் தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டால் 104 என்ற உதவி எண்ணில் பொதுமக்கள் புகாரளிக்கலாம் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
















