ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சிலை ஊர்வலம் கடந்த சென்ற பின் குண்டுவெடிக்கும் என இரண்டு இளைஞர்கள் கூறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கண்மாயில் கரைக்கப்பட்டன. ஶ்ரீவில்லிபுத்தூர் மணிக்கூண்டு பகுதியில் மசூதி அருகே ஊர்வலம் வந்தபோது, பாடல் இசைக்க காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்து முன்னணியினர் மறியலில் ஈடுபட்டனர்.
அதன்பின் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, ஊர்வலம் அப்பகுதியை கடந்து சென்றது. அப்போது மசூதியில் இருந்த இரண்டு இளைஞர்கள், ஶ்ரீவில்லிபுத்தூரில் குண்டுவெடிக்கும் என சவால் விட்டனர்.
இதையடுத்து, அந்த இருவரையும் போலீசார் அங்கிருந்து இழுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
















