பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து முதல்வர் விஜய் செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் விஜய் தலைமையில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த விரிவாக்கத்தின் மூலம், 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக பயன்பெற உள்ளனர்.
இதற்காக நடப்பு நிதியாண்டில் 217 கோடியே 63 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு 724 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும், மாணவர்களுக்கு சூடான, சுவையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்பட வேண்டும் என்றும், சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
















