மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக, இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் தொகுதி மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவதில்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி பாமக மாநில நிர்வாகிகள், மற்றும் இரு தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்தியதாகவும், அதன் முடிவில், எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
















