மரபணுவில் இருக்கும் தர்மம் நமக்கு வழிகாட்டுவதாக, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, இன்றைய காலத்தில் இளைஞர்கள் தர்மம் குறித்து ஈடுபாடு காட்டுவது அரிதாக கேட்கப்படும் விஷயமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
தர்மம் பற்றிப் பேசும்போது, அது முதியவர்களுக்கான விஷயம் என்றும், பகவத் கீதை, ராமாயணம் போன்றவை ஓய்வு பெற்ற பிறகு படிக்க வேண்டியவை என்று மக்கள் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
மனிதன் தனது அகங்காரத்தால், அனைத்தும் தன் அதிகாரத்தின் கீழ்தான் இயங்குவதாக நம்புவதாகவும் மோகன் பாகவத் குறிப்பிட்டார்.
தர்மம் நமது மரபணுவில் உள்ளது என்றும், அது நமக்கு வழிகாட்டுகிறது என்றும் கூறினார். தர்மம் மதத்திற்கு மேலானது என்றும் மோட்சத்திற்கு வழிவகுப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் குறிப்பிட்டார்.
















