கடற்கரையை தூய்மைப்படுத்துவது தினசரி பழக்கமாக மாற வேண்டும் என ஆளுநர் அர்லேகர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது.
தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் ற்றும் ரோட்டரி கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கலந்து கொண்டு கடற்கரை தூய்மைப் பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் இந்திய கடலோரக் காவல்படையினர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் அர்லேகர், உலகப் புகழ்பெற்ற மெரினாவை தூய்மைப்படுத்த தனியாக ஒரு நாள் ஒதுக்க வேண்டிய நிலை வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.
கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல என்று சுட்டிக்காட்டிய ஆளுநர், கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது தன்னுடைய பொறுப்பு என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும் என கூறினார்.
















