போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டாமா? - அண்ணாமலை கேள்வி
Sep 9, 2025, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டாமா? – அண்ணாமலை கேள்வி

Web Desk by Web Desk
Jan 6, 2024, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 6,000 பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக அரசு தொழிலாளர்கள் குறைகளைத் தீர்ப்பதில் காட்டும் சுணக்கம்!

தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள், வரும் ஜனவரி 9, 2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. போக்குவரத்துத் துறையில் நிரப்பப்படாமல் இருக்கும் 35,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும். நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழகங்களை மீட்டெடுக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, இந்த வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

போக்குவரத்துத் துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், ஏற்கனவே தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 6,000 பேருந்துகள் இயக்கப்படாமல் இருக்கின்றன என்றும், சென்னையில் மட்டும் சுமார் 600 முதல் 800 பேருந்துகள் தினமும் குறைவாக இயக்கப்படுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.

குறைவான பேருந்துகள் இயக்கத்தால், போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள், அதிகப்படியான பணிச்சுமைக்கு ஆளாவதோடு, போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால், பொதுமக்களும் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் பெரிதும் அரசுப் பேருந்துகளை நம்பி இருக்கும் சூழலில், தொழிலாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு, பொதுமக்களை மேலும் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாக்கும். ஆனால், திமுக அரசுக்கு தொழிலாளர்கள் பற்றியும் கவலை இல்லை, பொதுமக்கள் பற்றியும் அக்கறை இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஒவ்வொரு துறையிலும் தங்கள் கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. பண்டிகைக் காலங்களில் போக்குவரத்துத் துறை தொழிலாளர்களிடம் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ்.சிவசங்கர், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்று அவர்கள் வயிற்றில் அடித்திருக்கிறார்.

பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல், அதனைத் தள்ளிப் போட மட்டுமே முயற்சி செய்கிறார் அமைச்சர். போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டாமா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதுமே, அடுத்த இரண்டு வாரங்களும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அரசுப் போக்குவரத்தை நம்பியிருக்கும் இந்த சூழலில், திமுக அரசின் திறமையின்மையால் பண்டிகைக் காலத்தில் பொதுமக்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவதை சற்றும் அனுமதிக்க முடியாது. தொழிலாளர் நலன்களைப் புறக்கணிக்கும் அமைச்சரின் இந்த முடிவு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

போலி நிறுவனங்கள் மூலம், போக்குவரத்துத் துறையில் விசித்திரமான முறைகளில் ஊழல் செய்வதில் முனைப்புடன் இருக்கும் அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துறையின் தொழிலாளர்கள் குறைகளைத் தீர்ப்பதில் காட்டும் சுணக்கம் உண்மையில் இது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையா அல்லது பண்டிகைக் காலங்களில், தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் பேருந்துக் கட்டணத்தை மிக அதிகமாக உயர்த்தி பலன்பெறுவதற்காக அமைச்சர் செய்யும் கூட்டுச்சதியா என்ற கேள்வியையே எழுப்பியிருக்கிறது.

வரும் ஜனவரி 8 ஆம் தேதி அன்று, திமுக அரசு, மீண்டும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை அறிவித்துள்ளதாகத் தெரிகிறது. காலம் தாழ்த்தி பிரச்சினையைத் தள்ளிப் போடும் யுக்தியாக இல்லாமல், பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள் குறைகளைக் களைய, அமைச்சரும் திமுக அரசும் முன்வர வேண்டும் என்றும், பொங்கல் பண்டிகை காலத்தில் போக்குவரத்து வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு : தமிழக வீரர்கள் 50 பேர் பங்கேற்பு! 

Next Post

புரோ கபடி : தபாங் டெல்லி திரில் வெற்றி!

Related News

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies