போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டாமா? - அண்ணாமலை கேள்வி
Apr 29, 2026, 12:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டாமா? – அண்ணாமலை கேள்வி

Murugesan M by Murugesan M
Jan 6, 2024, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 6,000 பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக அரசு தொழிலாளர்கள் குறைகளைத் தீர்ப்பதில் காட்டும் சுணக்கம்!

தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள், வரும் ஜனவரி 9, 2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. போக்குவரத்துத் துறையில் நிரப்பப்படாமல் இருக்கும் 35,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும். நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழகங்களை மீட்டெடுக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, இந்த வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

போக்குவரத்துத் துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், ஏற்கனவே தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 6,000 பேருந்துகள் இயக்கப்படாமல் இருக்கின்றன என்றும், சென்னையில் மட்டும் சுமார் 600 முதல் 800 பேருந்துகள் தினமும் குறைவாக இயக்கப்படுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.

குறைவான பேருந்துகள் இயக்கத்தால், போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள், அதிகப்படியான பணிச்சுமைக்கு ஆளாவதோடு, போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால், பொதுமக்களும் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் பெரிதும் அரசுப் பேருந்துகளை நம்பி இருக்கும் சூழலில், தொழிலாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு, பொதுமக்களை மேலும் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாக்கும். ஆனால், திமுக அரசுக்கு தொழிலாளர்கள் பற்றியும் கவலை இல்லை, பொதுமக்கள் பற்றியும் அக்கறை இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஒவ்வொரு துறையிலும் தங்கள் கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. பண்டிகைக் காலங்களில் போக்குவரத்துத் துறை தொழிலாளர்களிடம் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ்.சிவசங்கர், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்று அவர்கள் வயிற்றில் அடித்திருக்கிறார்.

பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல், அதனைத் தள்ளிப் போட மட்டுமே முயற்சி செய்கிறார் அமைச்சர். போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டாமா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதுமே, அடுத்த இரண்டு வாரங்களும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அரசுப் போக்குவரத்தை நம்பியிருக்கும் இந்த சூழலில், திமுக அரசின் திறமையின்மையால் பண்டிகைக் காலத்தில் பொதுமக்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவதை சற்றும் அனுமதிக்க முடியாது. தொழிலாளர் நலன்களைப் புறக்கணிக்கும் அமைச்சரின் இந்த முடிவு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

போலி நிறுவனங்கள் மூலம், போக்குவரத்துத் துறையில் விசித்திரமான முறைகளில் ஊழல் செய்வதில் முனைப்புடன் இருக்கும் அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துறையின் தொழிலாளர்கள் குறைகளைத் தீர்ப்பதில் காட்டும் சுணக்கம் உண்மையில் இது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையா அல்லது பண்டிகைக் காலங்களில், தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் பேருந்துக் கட்டணத்தை மிக அதிகமாக உயர்த்தி பலன்பெறுவதற்காக அமைச்சர் செய்யும் கூட்டுச்சதியா என்ற கேள்வியையே எழுப்பியிருக்கிறது.

வரும் ஜனவரி 8 ஆம் தேதி அன்று, திமுக அரசு, மீண்டும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை அறிவித்துள்ளதாகத் தெரிகிறது. காலம் தாழ்த்தி பிரச்சினையைத் தள்ளிப் போடும் யுக்தியாக இல்லாமல், பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள் குறைகளைக் களைய, அமைச்சரும் திமுக அரசும் முன்வர வேண்டும் என்றும், பொங்கல் பண்டிகை காலத்தில் போக்குவரத்து வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு : தமிழக வீரர்கள் 50 பேர் பங்கேற்பு! 

Next Post

புரோ கபடி : தபாங் டெல்லி திரில் வெற்றி!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies