சுதந்திரப் போராட்டத்தை விட அயோத்தி போராட்டம் பெரியது: வி.ஹெச்.பி.!
Jul 25, 2025, 09:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திரப் போராட்டத்தை விட அயோத்தி போராட்டம் பெரியது: வி.ஹெச்.பி.!

Web Desk by Web Desk
Jan 6, 2024, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்தைவிட அயோத்தியில் இராமர் கோவிலுக்கான போராட்டம் மிகப்பெரியது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) தலைவர் ஷரத் ஷர்மா கூறியிருக்கிறார்.

அயோத்தி இராமஜென்ம பூமியில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அன்றையதினம் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது.

வாரணாசியைச் சேர்ந்த தீட்சிதர் லக்ஷ்மி காந்த் தீட்சித், இராம் லல்லாவின் சிலை பிரதிஷ்டைக்கான முக்கியச் சடங்குகளைச் செய்கிறார். நிகழ்ச்சியை முன்னிட்டு, 1008 ஹண்டி மகாயக்ஞமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

விழாவையொட்டி, ஜனவரி 14 முதல் ஜனவரி 22-ம் தேதி வரை அயோத்தியில் அமிர்த மஹோத்ஸவ் கொண்டாடப்படுகிறது. மேலும், கும்பாபிஷேக விழாவிற்கான வேத சடங்குகள் ஜனவரி 16-ம் தேதி தொடங்குகின்றன. ஆகவே, விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இதுகுறித்து வி.ஹெச்.பி. தலைவர் ஷரத் ஷர்மா கூறுகையில், “சுதந்திர இயக்கத்தைவிட இராமர் கோவில் இயக்கம் மிகப்பெரிய இயக்கம். ஏனெனில், இது மதம், கலாச்சாரம் மற்றும் வரலாறு தொடர்பான மக்கள் பங்கேற்ற ஒரு மத இயக்கம்.

இதற்காக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். இப்போராட்டம் முடிவுக்கு வந்து இராமர் கோவில் கட்டுவதற்கு 500 ஆண்டுகள் ஆனது. ஆகவே, இப்போராட்டத்தை 1947 சுதந்திரப் போராட்டத்தை விட பெரிய இயக்கம் என்று கருதலாம்.

இராம் லல்லாவின் கும்பாபிஷேக விழாவிற்கு மொத்தம் 7,000 அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. தவிர, நாட்டிலுள்ள சுமார் 4,000 துறவிகள் மற்றும் 3,000 பொதுமக்கள் வி.வி.ஐ.பி.க்களாக அழைக்கப்படுகிறார்கள்.

கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழின் முதல் பக்கத்தில் பகவான் இராம் லல்லாவின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது. மேலும், நிகழ்ச்சியின் பல்வேறு விவரங்கள் தேதி வாரியாக குறிப்பிடப்பட்டுள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த, புராணக் கதைகளைப் பற்றி தற்போதைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக, 1949-ம் ஆண்டு முதல் இராமர் கோவில் இயக்கத்தில் பங்குபெற்றவர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய சிறு புத்தகத்தையும் நாங்கள் வழங்குகிறோம்” என்றார்.

Tags: AyodyaVHP leaderRam Temple
ShareTweetSendShare
Previous Post

இதயத்தில் உணர்ச்சிகளை நிரப்பும் சவஸ்தியின் பாடல்! – பிரதமர் மோடி

Next Post

பூந்தமல்லி டூ பரந்தூர் மெட்ரோ இரயில் – அறிக்கை சொல்வது என்ன?

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies