சுதந்திரப் போராட்டத்தை விட அயோத்தி போராட்டம் பெரியது: வி.ஹெச்.பி.!
Jun 14, 2026, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திரப் போராட்டத்தை விட அயோத்தி போராட்டம் பெரியது: வி.ஹெச்.பி.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 6, 2024, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்தைவிட அயோத்தியில் இராமர் கோவிலுக்கான போராட்டம் மிகப்பெரியது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) தலைவர் ஷரத் ஷர்மா கூறியிருக்கிறார்.

அயோத்தி இராமஜென்ம பூமியில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அன்றையதினம் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது.

வாரணாசியைச் சேர்ந்த தீட்சிதர் லக்ஷ்மி காந்த் தீட்சித், இராம் லல்லாவின் சிலை பிரதிஷ்டைக்கான முக்கியச் சடங்குகளைச் செய்கிறார். நிகழ்ச்சியை முன்னிட்டு, 1008 ஹண்டி மகாயக்ஞமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

விழாவையொட்டி, ஜனவரி 14 முதல் ஜனவரி 22-ம் தேதி வரை அயோத்தியில் அமிர்த மஹோத்ஸவ் கொண்டாடப்படுகிறது. மேலும், கும்பாபிஷேக விழாவிற்கான வேத சடங்குகள் ஜனவரி 16-ம் தேதி தொடங்குகின்றன. ஆகவே, விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இதுகுறித்து வி.ஹெச்.பி. தலைவர் ஷரத் ஷர்மா கூறுகையில், “சுதந்திர இயக்கத்தைவிட இராமர் கோவில் இயக்கம் மிகப்பெரிய இயக்கம். ஏனெனில், இது மதம், கலாச்சாரம் மற்றும் வரலாறு தொடர்பான மக்கள் பங்கேற்ற ஒரு மத இயக்கம்.

இதற்காக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். இப்போராட்டம் முடிவுக்கு வந்து இராமர் கோவில் கட்டுவதற்கு 500 ஆண்டுகள் ஆனது. ஆகவே, இப்போராட்டத்தை 1947 சுதந்திரப் போராட்டத்தை விட பெரிய இயக்கம் என்று கருதலாம்.

இராம் லல்லாவின் கும்பாபிஷேக விழாவிற்கு மொத்தம் 7,000 அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. தவிர, நாட்டிலுள்ள சுமார் 4,000 துறவிகள் மற்றும் 3,000 பொதுமக்கள் வி.வி.ஐ.பி.க்களாக அழைக்கப்படுகிறார்கள்.

கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழின் முதல் பக்கத்தில் பகவான் இராம் லல்லாவின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது. மேலும், நிகழ்ச்சியின் பல்வேறு விவரங்கள் தேதி வாரியாக குறிப்பிடப்பட்டுள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த, புராணக் கதைகளைப் பற்றி தற்போதைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக, 1949-ம் ஆண்டு முதல் இராமர் கோவில் இயக்கத்தில் பங்குபெற்றவர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய சிறு புத்தகத்தையும் நாங்கள் வழங்குகிறோம்” என்றார்.

Tags: Ram TempleAyodyaVHP leader
ShareTweetSendShare
Previous Post

இதயத்தில் உணர்ச்சிகளை நிரப்பும் சவஸ்தியின் பாடல்! – பிரதமர் மோடி

Next Post

பூந்தமல்லி டூ பரந்தூர் மெட்ரோ இரயில் – அறிக்கை சொல்வது என்ன?

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies