சுதந்திரப் போராட்டத்தை விட அயோத்தி போராட்டம் பெரியது: வி.ஹெச்.பி.!
Apr 29, 2026, 11:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திரப் போராட்டத்தை விட அயோத்தி போராட்டம் பெரியது: வி.ஹெச்.பி.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 6, 2024, 03:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்தைவிட அயோத்தியில் இராமர் கோவிலுக்கான போராட்டம் மிகப்பெரியது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) தலைவர் ஷரத் ஷர்மா கூறியிருக்கிறார்.

அயோத்தி இராமஜென்ம பூமியில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அன்றையதினம் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது.

வாரணாசியைச் சேர்ந்த தீட்சிதர் லக்ஷ்மி காந்த் தீட்சித், இராம் லல்லாவின் சிலை பிரதிஷ்டைக்கான முக்கியச் சடங்குகளைச் செய்கிறார். நிகழ்ச்சியை முன்னிட்டு, 1008 ஹண்டி மகாயக்ஞமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

விழாவையொட்டி, ஜனவரி 14 முதல் ஜனவரி 22-ம் தேதி வரை அயோத்தியில் அமிர்த மஹோத்ஸவ் கொண்டாடப்படுகிறது. மேலும், கும்பாபிஷேக விழாவிற்கான வேத சடங்குகள் ஜனவரி 16-ம் தேதி தொடங்குகின்றன. ஆகவே, விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இதுகுறித்து வி.ஹெச்.பி. தலைவர் ஷரத் ஷர்மா கூறுகையில், “சுதந்திர இயக்கத்தைவிட இராமர் கோவில் இயக்கம் மிகப்பெரிய இயக்கம். ஏனெனில், இது மதம், கலாச்சாரம் மற்றும் வரலாறு தொடர்பான மக்கள் பங்கேற்ற ஒரு மத இயக்கம்.

இதற்காக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். இப்போராட்டம் முடிவுக்கு வந்து இராமர் கோவில் கட்டுவதற்கு 500 ஆண்டுகள் ஆனது. ஆகவே, இப்போராட்டத்தை 1947 சுதந்திரப் போராட்டத்தை விட பெரிய இயக்கம் என்று கருதலாம்.

இராம் லல்லாவின் கும்பாபிஷேக விழாவிற்கு மொத்தம் 7,000 அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. தவிர, நாட்டிலுள்ள சுமார் 4,000 துறவிகள் மற்றும் 3,000 பொதுமக்கள் வி.வி.ஐ.பி.க்களாக அழைக்கப்படுகிறார்கள்.

கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழின் முதல் பக்கத்தில் பகவான் இராம் லல்லாவின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது. மேலும், நிகழ்ச்சியின் பல்வேறு விவரங்கள் தேதி வாரியாக குறிப்பிடப்பட்டுள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த, புராணக் கதைகளைப் பற்றி தற்போதைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக, 1949-ம் ஆண்டு முதல் இராமர் கோவில் இயக்கத்தில் பங்குபெற்றவர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய சிறு புத்தகத்தையும் நாங்கள் வழங்குகிறோம்” என்றார்.

Tags: Ram TempleAyodyaVHP leader
ShareTweetSendShare
Previous Post

இதயத்தில் உணர்ச்சிகளை நிரப்பும் சவஸ்தியின் பாடல்! – பிரதமர் மோடி

Next Post

பூந்தமல்லி டூ பரந்தூர் மெட்ரோ இரயில் – அறிக்கை சொல்வது என்ன?

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies