நடுவானில் திடீரென திறந்த கதவு: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
Jan 14, 2026, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடுவானில் திடீரென திறந்த கதவு: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 6, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

171 பயணிகள், 6 பணியாளர்களுடன் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் கதவுகள் திடீரென திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அமெரிக்காவின் அலாஸ்கா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் “737-9 MAX” என்கிற விமானம் போர்ட்லேண்டில் இருந்து கலிபோர்னியாவின் ஒண்டாரியோவுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 171 பயணிகளும், 6 விமான பணியாளர்களும் இருந்தனர்.

இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் நடுப்பகுதியில் உள்ள வெளியேறும் கதவு திடீரென திறந்தது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கதவின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் பதற்றமடைந்தனர்.

உடனடியாக, இதுகுறித்து விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட விமானி, உடனடியாக விமானத்தை போர்ட்லேண்டுக்கே திரும்பியவர், அவசர அவசரமாக தரை இறக்கினார். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் கூறுகையில், “வெளியேறும் கதவு திடீரென விமானத்தில் இருந்து முற்றிலும் விலகி தனியாகச் சென்றது” என்று பதற்றத்துடன் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, அலாஸ்கா நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதன் பிறகு தகவலை பகிர்ந்து கொள்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறது.

இதனிடையே, அலாக்ஸா விமானம் 16,325 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்ததாக கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது.

இந்த விமானம் கடந்த அக்டோபர் 1-ம் தேதிதான் அலாஸ்கா நிறுவனத்துக்கு டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. இந்த விமானத்தை நவம்பர் 11-ம் தேதியில் இருந்து அலாஸ்கா நிறுவனம் வணிகப் பயன்பாட்டில் ஈடுபடுத்தி வந்திருக்கிறது.

இந்த நிலையில், விமானத்தில் பயணித்த பயணிகள், கதவு திறந்திருந்த காட்சியை தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், இந்த விபத்து குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில், அந்த விமானத்தின் நடுவில் உள்ள ‘எக்ஸிட் டோர்’ பறந்திருப்பதைக் காணமுடிகிறது. வெளியேறுவதற்காக வைக்கப்பட்ட அந்தக் கதவு, பயன்படுத்தப்படாமல் அடைக்கப்பட்டே இருந்திருக்கிறது.

இது குறித்து விமானத்தில் பயணித்த 22 வயது இளைஞர் கூறுகையில், “நான் கண் விழித்ததும் முதலில் பார்த்தது எனக்கு முன்னால் இருந்த ஆக்ஸிஜன் மாஸ்கைத்தான். பின்னர், எனது இடது பக்கம் பார்த்தேன், அந்தப் பக்கம் இருந்த விமானத்தின் கதவு காணாமல் போயிருந்தது. அப்போது நான் இறந்து விடுவேன் என்றுதான் எனக்கு முதலில் தோன்றியது” என்றார்.

மேலும், விமான பாதுகாப்பு நிபுணர் அந்தோணி பிரிக்ஹவுஸ் கூறுகையில், “அந்தப் பயணிகள் எதிர்கொண்ட பயங்கர அனுபவத்தை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.

அச்சம்பவம் பயங்கர சத்தத்துடன் இருந்திருக்கும். காற்று அதிகமாக விமானத்துக்குள் நுழைந்திருக்கும். நிச்சயமாக இது ஒரு பயங்கரமான சூழ்நிலைதான்” என்று தெரிவித்திருக்கிறார்.

போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் கூறுகையில், “அலாஸ்கா ஏர்லைன்ஸின் ஏ.எஸ்.1282 விமானத்துக்கு நிகழ்ந்த சம்பவம் குறித்து நாங்கள் அறிந்தோம். இதுகுறித்து கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள முயன்று வருகிறோம்.

மேலும், எங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். விசாரணையில் ஒத்துழைப்பு வழங்க போயிங் தொழில்நுட்பக் குழு உதவ தயாராக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: Alaska AirlinesDoorOpen
ShareTweetSendShare
Previous Post

நெல்லை – திருச்செந்தூர் இரயில் பாதை சீரானது!

Next Post

கதாநாயகனாக களமிறங்கும் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின்!

Related News

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies