இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா சரமாரி ஏவுகணைத் தாக்குதல்!
Mar 15, 2026, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா சரமாரி ஏவுகணைத் தாக்குதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 6, 2024, 07:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் அமைப்பின் 2-ம் நிலைத் தலைவரைக் கொன்றதற்கு பழிக்குப்பழியாக, இஸ்ரேல் மீது 60 ஏவுகணைகளை ஹிஸ்புல்லா அமைப்பு ஏவி இருக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது ஒரே நேரத்தில் 5,000 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.

மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, அப்பாவி மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இத்தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேல் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது. இத்தாக்குதல் இன்று வரை நீடித்து வருகிறது. இஸ்ரேலின் அசுரத் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் கிடக்கிறது.

இந்தப் போரில், லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, இஸ்ரேல் மீது தாக்குதலும் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

3 மாதங்களாகத் தொடரும் இத்தாக்குதல்களில் லெபனான் நாட்டைச் சேர்ந்த 129 ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் உட்பட 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 3 பத்திரிகையாளர்களும் அடங்கம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் லெபனானின் பெய்ரூட் நகர் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவரான ஷேக் சலே அல் அரூரி கொல்லப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹாஸன் நஸ்ரல்லா, விரைவில் இதற்கான பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில்தான், இன்று காலை இஸ்ரேல் நாட்டின் மீது அடுத்தடுத்து 60 ஏவுகணைகளை ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஏவி இருக்கிறார்கள். இது தொடர்பாக ஹிஸ்புல்லா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சிறந்த தலைவரான ஷேக் சலே அல் அரூரியைக் கொலை செய்த குற்றத்திற்காக விரைவில் பதிலடி கொடுக்க உள்ளோம்.

இதில் முதன்மைத் தாக்குதலாக, இஸ்ரேலின் மெரோன் வான் கட்டுப்பாட்டு தளத்தைக் குறிவைத்து 62 பலவகைப்பட்ட ராக்கெட்டுகளை ஏவி இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: IsraelHezbollahfire rockets
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் : நேரடி ஒளிபரப்பு செய்ய பாஜக திட்டம்! 

Next Post

ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்ப்பவர்களுக்கு வழங்குவதாகக் கூறிய ஊக்கத்தொகை ரூ.1,000 எங்கே! – திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies