இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா சரமாரி ஏவுகணைத் தாக்குதல்!
Sep 13, 2026, 12:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா சரமாரி ஏவுகணைத் தாக்குதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 6, 2024, 07:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹமாஸ் அமைப்பின் 2-ம் நிலைத் தலைவரைக் கொன்றதற்கு பழிக்குப்பழியாக, இஸ்ரேல் மீது 60 ஏவுகணைகளை ஹிஸ்புல்லா அமைப்பு ஏவி இருக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது ஒரே நேரத்தில் 5,000 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.

மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, அப்பாவி மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இத்தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேல் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது. இத்தாக்குதல் இன்று வரை நீடித்து வருகிறது. இஸ்ரேலின் அசுரத் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் கிடக்கிறது.

இந்தப் போரில், லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, இஸ்ரேல் மீது தாக்குதலும் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

3 மாதங்களாகத் தொடரும் இத்தாக்குதல்களில் லெபனான் நாட்டைச் சேர்ந்த 129 ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் உட்பட 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 3 பத்திரிகையாளர்களும் அடங்கம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் லெபனானின் பெய்ரூட் நகர் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவரான ஷேக் சலே அல் அரூரி கொல்லப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹாஸன் நஸ்ரல்லா, விரைவில் இதற்கான பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில்தான், இன்று காலை இஸ்ரேல் நாட்டின் மீது அடுத்தடுத்து 60 ஏவுகணைகளை ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஏவி இருக்கிறார்கள். இது தொடர்பாக ஹிஸ்புல்லா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சிறந்த தலைவரான ஷேக் சலே அல் அரூரியைக் கொலை செய்த குற்றத்திற்காக விரைவில் பதிலடி கொடுக்க உள்ளோம்.

இதில் முதன்மைத் தாக்குதலாக, இஸ்ரேலின் மெரோன் வான் கட்டுப்பாட்டு தளத்தைக் குறிவைத்து 62 பலவகைப்பட்ட ராக்கெட்டுகளை ஏவி இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: IsraelHezbollahfire rockets
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் : நேரடி ஒளிபரப்பு செய்ய பாஜக திட்டம்! 

Next Post

ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்ப்பவர்களுக்கு வழங்குவதாகக் கூறிய ஊக்கத்தொகை ரூ.1,000 எங்கே! – திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies