ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு 15 அடி உயர அணில் சிலை!
Jul 25, 2025, 08:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு 15 அடி உயர அணில் சிலை!

Web Desk by Web Desk
Jan 7, 2024, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் 15 அடி உயர அணில் சிலையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார். இந்த சிலை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள இராம பக்தர்கள் தங்களால் இயன்றவற்றை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அந்த வகையில், குஜராத் தொழிலதிபர் ஒருவர், அமெரிக்க வைரக்கற்கள் பதித்த அயோத்தி கோவில் வடிவிலான நெக்லஸை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்.

அதேபோல, குஜராத்தைச் சேர்ந்த மற்றொரு பக்தர் 108 அடி நீளமுள்ள அகர்பத்தியை வழங்கி இருக்கிறார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு பக்தர் 400 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட பூட்டை வழங்கி இருக்கிறார். இப்படி பலரும் தங்களால் முடிந்த பொருட்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் 15 அடி உயர அணில் சிலையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார். பெங்களூரு நாகசந்திரா மெட்ரோ இரயில் நிலையம் அருகே பிரபல இன்ஜினீயரிங் நிறுவனத்தை நடத்தி வருபவர் சி.பிரகாஷ்.

தொழிலதிபரான இவர், அயோத்தி இராமர் கோவில் திறப்பையொட்டி, இராமருக்கு உதவிய அணிலை நினைவுகூரும் வகையில் அணில் சிலையை காணிக்கையாக வழங்க முடிவு செய்தார். இதையடுத்து, 15 அடி உயரம், 7½ அடி அகலத்தில் அணில் சிலை வடிவமைக்கும் பணியை கல்யாண் ரத்தோட் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

இந்தச் சிலை 2½ டன் கார்ட்போர்டு ஸ்டீலால் வடிவமைக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், அணில் சிலை முழு வடிவம் பெற்றதைத் தொடர்ந்து, நாகசந்திராவில் இருந்து ராட்சத லாரி மூலம் அணில் சிலை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், தொழிலதிபர் சி.பிரகாஷ், அவரது மனைவி பாரதி, சிலை வடிவமைப்பாளர் கல்யாண் ரத்தோட் மற்றும் இந்து அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தொழிலதிபர் சி.பிரகாஷ் கூறுகையில், “அணில் சிலை வரும் 11-ம் தேதி அயோத்தியை சென்றடையும். இந்த சிலை அயோத்தி தாம் இரயில் நிலையத்தின் முன்பகுதியில் வரும் 12-ம் தேதி நிறுவப்பட உள்ளது. இதற்கு இரயில்வே துறையும் அனுமதி வழங்கி இருக்கிறது” என்றார்.

இதுதொடர்பாக அணில் சிலையை உருவாக்கிய கல்யாண் ரத்தோட் கூறுகையில், “இந்த அணில் சிலையை முதலில் காகிதத்தில் உருவாக்கினோம். பிறகுதான், கார்ட் போர்டு ஸ்டீலால் சிலையை உருவாக்க முடிந்தது.

100 ஆண்டுகள் ஆனாலும் எந்த சூழ்நிலையிலும் இந்த அணில் சிலை சேதமடையாமல் இருக்கும். முதலில் அட்டைப் பெட்டியால் அணில் சிலையை உருவாக்கி பின்னர் ஸ்டீலால் வடிவமைத்துள்ளோம். இதை பராமரிக்கும் செலவும் குறைவு” என்றார்.

Tags: Bussiness ManSquirrelPresentAyodyaBengalur
ShareTweetSendShare
Previous Post

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Next Post

சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்பும் பத்ருதீன் அஜ்மல் : பாஜக பதிலடி!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies