ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு 15 அடி உயர அணில் சிலை!
Oct 25, 2025, 04:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு 15 அடி உயர அணில் சிலை!

Web Desk by Web Desk
Jan 7, 2024, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் 15 அடி உயர அணில் சிலையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார். இந்த சிலை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள இராம பக்தர்கள் தங்களால் இயன்றவற்றை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அந்த வகையில், குஜராத் தொழிலதிபர் ஒருவர், அமெரிக்க வைரக்கற்கள் பதித்த அயோத்தி கோவில் வடிவிலான நெக்லஸை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்.

அதேபோல, குஜராத்தைச் சேர்ந்த மற்றொரு பக்தர் 108 அடி நீளமுள்ள அகர்பத்தியை வழங்கி இருக்கிறார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு பக்தர் 400 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட பூட்டை வழங்கி இருக்கிறார். இப்படி பலரும் தங்களால் முடிந்த பொருட்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் 15 அடி உயர அணில் சிலையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார். பெங்களூரு நாகசந்திரா மெட்ரோ இரயில் நிலையம் அருகே பிரபல இன்ஜினீயரிங் நிறுவனத்தை நடத்தி வருபவர் சி.பிரகாஷ்.

தொழிலதிபரான இவர், அயோத்தி இராமர் கோவில் திறப்பையொட்டி, இராமருக்கு உதவிய அணிலை நினைவுகூரும் வகையில் அணில் சிலையை காணிக்கையாக வழங்க முடிவு செய்தார். இதையடுத்து, 15 அடி உயரம், 7½ அடி அகலத்தில் அணில் சிலை வடிவமைக்கும் பணியை கல்யாண் ரத்தோட் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

இந்தச் சிலை 2½ டன் கார்ட்போர்டு ஸ்டீலால் வடிவமைக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், அணில் சிலை முழு வடிவம் பெற்றதைத் தொடர்ந்து, நாகசந்திராவில் இருந்து ராட்சத லாரி மூலம் அணில் சிலை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், தொழிலதிபர் சி.பிரகாஷ், அவரது மனைவி பாரதி, சிலை வடிவமைப்பாளர் கல்யாண் ரத்தோட் மற்றும் இந்து அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தொழிலதிபர் சி.பிரகாஷ் கூறுகையில், “அணில் சிலை வரும் 11-ம் தேதி அயோத்தியை சென்றடையும். இந்த சிலை அயோத்தி தாம் இரயில் நிலையத்தின் முன்பகுதியில் வரும் 12-ம் தேதி நிறுவப்பட உள்ளது. இதற்கு இரயில்வே துறையும் அனுமதி வழங்கி இருக்கிறது” என்றார்.

இதுதொடர்பாக அணில் சிலையை உருவாக்கிய கல்யாண் ரத்தோட் கூறுகையில், “இந்த அணில் சிலையை முதலில் காகிதத்தில் உருவாக்கினோம். பிறகுதான், கார்ட் போர்டு ஸ்டீலால் சிலையை உருவாக்க முடிந்தது.

100 ஆண்டுகள் ஆனாலும் எந்த சூழ்நிலையிலும் இந்த அணில் சிலை சேதமடையாமல் இருக்கும். முதலில் அட்டைப் பெட்டியால் அணில் சிலையை உருவாக்கி பின்னர் ஸ்டீலால் வடிவமைத்துள்ளோம். இதை பராமரிக்கும் செலவும் குறைவு” என்றார்.

Tags: AyodyaBengalurBussiness ManSquirrelPresent
ShareTweetSendShare
Previous Post

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Next Post

சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்பும் பத்ருதீன் அஜ்மல் : பாஜக பதிலடி!

Related News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies