ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு 15 அடி உயர அணில் சிலை!
Apr 29, 2026, 11:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு 15 அடி உயர அணில் சிலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 7, 2024, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் 15 அடி உயர அணில் சிலையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார். இந்த சிலை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள இராம பக்தர்கள் தங்களால் இயன்றவற்றை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அந்த வகையில், குஜராத் தொழிலதிபர் ஒருவர், அமெரிக்க வைரக்கற்கள் பதித்த அயோத்தி கோவில் வடிவிலான நெக்லஸை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்.

அதேபோல, குஜராத்தைச் சேர்ந்த மற்றொரு பக்தர் 108 அடி நீளமுள்ள அகர்பத்தியை வழங்கி இருக்கிறார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு பக்தர் 400 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட பூட்டை வழங்கி இருக்கிறார். இப்படி பலரும் தங்களால் முடிந்த பொருட்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் 15 அடி உயர அணில் சிலையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார். பெங்களூரு நாகசந்திரா மெட்ரோ இரயில் நிலையம் அருகே பிரபல இன்ஜினீயரிங் நிறுவனத்தை நடத்தி வருபவர் சி.பிரகாஷ்.

தொழிலதிபரான இவர், அயோத்தி இராமர் கோவில் திறப்பையொட்டி, இராமருக்கு உதவிய அணிலை நினைவுகூரும் வகையில் அணில் சிலையை காணிக்கையாக வழங்க முடிவு செய்தார். இதையடுத்து, 15 அடி உயரம், 7½ அடி அகலத்தில் அணில் சிலை வடிவமைக்கும் பணியை கல்யாண் ரத்தோட் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

இந்தச் சிலை 2½ டன் கார்ட்போர்டு ஸ்டீலால் வடிவமைக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், அணில் சிலை முழு வடிவம் பெற்றதைத் தொடர்ந்து, நாகசந்திராவில் இருந்து ராட்சத லாரி மூலம் அணில் சிலை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், தொழிலதிபர் சி.பிரகாஷ், அவரது மனைவி பாரதி, சிலை வடிவமைப்பாளர் கல்யாண் ரத்தோட் மற்றும் இந்து அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தொழிலதிபர் சி.பிரகாஷ் கூறுகையில், “அணில் சிலை வரும் 11-ம் தேதி அயோத்தியை சென்றடையும். இந்த சிலை அயோத்தி தாம் இரயில் நிலையத்தின் முன்பகுதியில் வரும் 12-ம் தேதி நிறுவப்பட உள்ளது. இதற்கு இரயில்வே துறையும் அனுமதி வழங்கி இருக்கிறது” என்றார்.

இதுதொடர்பாக அணில் சிலையை உருவாக்கிய கல்யாண் ரத்தோட் கூறுகையில், “இந்த அணில் சிலையை முதலில் காகிதத்தில் உருவாக்கினோம். பிறகுதான், கார்ட் போர்டு ஸ்டீலால் சிலையை உருவாக்க முடிந்தது.

100 ஆண்டுகள் ஆனாலும் எந்த சூழ்நிலையிலும் இந்த அணில் சிலை சேதமடையாமல் இருக்கும். முதலில் அட்டைப் பெட்டியால் அணில் சிலையை உருவாக்கி பின்னர் ஸ்டீலால் வடிவமைத்துள்ளோம். இதை பராமரிக்கும் செலவும் குறைவு” என்றார்.

Tags: AyodyaBengalurBussiness ManSquirrelPresent
ShareTweetSendShare
Previous Post

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Next Post

சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்பும் பத்ருதீன் அஜ்மல் : பாஜக பதிலடி!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies