ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு 15 அடி உயர அணில் சிலை!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு 15 அடி உயர அணில் சிலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 7, 2024, 12:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் 15 அடி உயர அணில் சிலையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார். இந்த சிலை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள இராம பக்தர்கள் தங்களால் இயன்றவற்றை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அந்த வகையில், குஜராத் தொழிலதிபர் ஒருவர், அமெரிக்க வைரக்கற்கள் பதித்த அயோத்தி கோவில் வடிவிலான நெக்லஸை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்.

அதேபோல, குஜராத்தைச் சேர்ந்த மற்றொரு பக்தர் 108 அடி நீளமுள்ள அகர்பத்தியை வழங்கி இருக்கிறார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு பக்தர் 400 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட பூட்டை வழங்கி இருக்கிறார். இப்படி பலரும் தங்களால் முடிந்த பொருட்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் 15 அடி உயர அணில் சிலையை காணிக்கையாக வழங்கி இருக்கிறார். பெங்களூரு நாகசந்திரா மெட்ரோ இரயில் நிலையம் அருகே பிரபல இன்ஜினீயரிங் நிறுவனத்தை நடத்தி வருபவர் சி.பிரகாஷ்.

தொழிலதிபரான இவர், அயோத்தி இராமர் கோவில் திறப்பையொட்டி, இராமருக்கு உதவிய அணிலை நினைவுகூரும் வகையில் அணில் சிலையை காணிக்கையாக வழங்க முடிவு செய்தார். இதையடுத்து, 15 அடி உயரம், 7½ அடி அகலத்தில் அணில் சிலை வடிவமைக்கும் பணியை கல்யாண் ரத்தோட் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

இந்தச் சிலை 2½ டன் கார்ட்போர்டு ஸ்டீலால் வடிவமைக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், அணில் சிலை முழு வடிவம் பெற்றதைத் தொடர்ந்து, நாகசந்திராவில் இருந்து ராட்சத லாரி மூலம் அணில் சிலை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், தொழிலதிபர் சி.பிரகாஷ், அவரது மனைவி பாரதி, சிலை வடிவமைப்பாளர் கல்யாண் ரத்தோட் மற்றும் இந்து அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தொழிலதிபர் சி.பிரகாஷ் கூறுகையில், “அணில் சிலை வரும் 11-ம் தேதி அயோத்தியை சென்றடையும். இந்த சிலை அயோத்தி தாம் இரயில் நிலையத்தின் முன்பகுதியில் வரும் 12-ம் தேதி நிறுவப்பட உள்ளது. இதற்கு இரயில்வே துறையும் அனுமதி வழங்கி இருக்கிறது” என்றார்.

இதுதொடர்பாக அணில் சிலையை உருவாக்கிய கல்யாண் ரத்தோட் கூறுகையில், “இந்த அணில் சிலையை முதலில் காகிதத்தில் உருவாக்கினோம். பிறகுதான், கார்ட் போர்டு ஸ்டீலால் சிலையை உருவாக்க முடிந்தது.

100 ஆண்டுகள் ஆனாலும் எந்த சூழ்நிலையிலும் இந்த அணில் சிலை சேதமடையாமல் இருக்கும். முதலில் அட்டைப் பெட்டியால் அணில் சிலையை உருவாக்கி பின்னர் ஸ்டீலால் வடிவமைத்துள்ளோம். இதை பராமரிக்கும் செலவும் குறைவு” என்றார்.

Tags: AyodyaBengalurBussiness ManSquirrelPresent
Share
Tweet
SendShare
Previous Post

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Next Post

சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்பும் பத்ருதீன் அஜ்மல் : பாஜக பதிலடி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies