பொங்கல் பண்டிகையும், தாய் வீட்டு சீர்வரிசையும்!
Jan 14, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொங்கல் பண்டிகையும், தாய் வீட்டு சீர்வரிசையும்!

Murugesan M by Murugesan M
Jan 15, 2024, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு சீர் வரும். இந்த பழக்கம் எப்படி வந்தது என்பது தொடர்பாக சற்று விரிவாக பார்ப்போம்.

தமிழர்களின் ஒவ்வொரு விழா, சடங்குக்குப் பின்னணியிலும் பாரம்பரியமும், வரலாறும் இணைந்து இருக்கும். அவற்றில் ஒன்றுதான் பொங்கல் பண்டிகை. அக்காலத்தில் உழவுக்கு உதவி செய்த இயற்கை, காளைகள் என அனைவருக்கும் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தமிழர்களின் முதன்மையான திருநாளாக திகழ்ந்து வருகிறது.

புத்தாடை அணிந்து பொங்கல் சமைத்து செங்கரும்பு சுவைத்து, உற்றார் உறவினரோடு கூடுவது தனி இன்பம் தான்.

அதுவும் புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு பொங்கல் பண்டிகை என்றால் தனி குஷிதான். உலகிலேயே உயர்வான சொந்தமாக கருதப்படுவது ரத்த சொந்தம் தான்.ஆம். தாய் வீட்டில் இருந்து வரும் சீர் எப்போதுமே உயர்வானது தான். தாய்வழி உறவில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவ்து பொங்கல் சீர்வரிசை தான்.

திருமணமாகிச் சென்ற பெண்கள், கணவரின் வீட்டில் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடத் தேவையான அத்தனை பொருள்களையும் தாய் வீட்டில் இருந்து சீர்வரிசையாக அனுப்பி வைக்கும் வழக்கம் தமிழரிடத்தில் பாரம்பரியமாக இருந்து வருகிறது.

சில குடும்பங்களில் திருமணமான முதல் ஆண்டு கொண்டாடும் தலைப்பொங்கலுக்கு மட்டும் சீர் வரிசை தருவார்கள். ஆனால் சில குடும்பங்களில் ஆண்டுதோறும் சீர்வரிசை அளிப்பார்கள். தாய், தந்தை மறைந்தாலும் பாசமலரை மறக்காத உடன்பிறப்புக்கள் ஆண்டுதோறும் சீர்வரிசை அளித்து பிறந்த வீட்டு கௌரவத்தை நிலைநாட்டுவார்கள். பொங்கல் சீர் என்பதில் பிறந்த வீட்டின் கௌரவம் அடங்கியுள்ளதாக பரவலாக நம்பப்படுகிறது.

அந்த காலத்தில் கட்டுக்கட்டாய் கரும்புகள், மூட்டை மூட்டையாய் பச்சரிசி, வெல்லம், உப்பு, மஞ்சள், காய்கறிகள், வாழைத்தார், மண்பானைகள், புத்தாடைகள் மற்றும் பொங்கல் வைப்பதற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் தலைச்சுமையாய் நடந்து சென்றோ, குதிரை மற்றும் மாட்டு வண்டிகளில் கொண்டு சென்றோ மகளின் வீட்டில் பெற்றோர் அளித்து வந்தனர்.

குழந்தை பிறந்தால் பயன்படுமே என்பதற்காக கறவை மாடுகளையும் சிலர் சீராகக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது காலம் மாறி வருகிறது.

இவ்வளவு பொருள்களையும் கொண்டு சென்றால் எங்கு வைப்பது, யாரிடம் கொடுப்பது. அதற்குப் பதிலாக சீர் கொடுக்க ஆகும் செலவை அப்படியே பணமாகக் கொடுத்து விடுங்கள். தேவையானவற்றை நாங்களே வாங்கிக் கொள்கிறோம்’ என மகளோ, மருமகன் குடும்பத்தினரோ கேட்டுப் பெறும் நிலை உருவாகிவிட்டது. எனவே பணமாக கொடுக்கும் பழக்கம் பெருகி வருகிறது.

ஆனால் கிராமப்புறங்களில் இந்த வழக்கம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தொட்டுத் தொடரும் பந்தமாய் நீடித்து வரும் தமிழர்களின் பண்பாட்டு கலாச்சார நிகழ்வை எண்ணி பெருமை கொள்வோம். பொங்கலோ பொங்கல் என கொண்டாடி மகிழ்வோம். வாழ்க தமிழ், வளர்க நமது கலாச்சாரம்.

Tags: pongal gift to daughtersthai masamPongal festivalthai pongalpongal
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் பண்டிகையின் ஆன்மீக முக்கியத்துவம்!

Next Post

பொங்கல் பண்டிகையின் சிறப்பு குறித்து பார்ப்போம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies