பொங்கல் பண்டிகையும், தாய் வீட்டு சீர்வரிசையும்!
Sep 14, 2026, 03:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொங்கல் பண்டிகையும், தாய் வீட்டு சீர்வரிசையும்!

Murugesan M by Murugesan M
Jan 15, 2024, 09:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு சீர் வரும். இந்த பழக்கம் எப்படி வந்தது என்பது தொடர்பாக சற்று விரிவாக பார்ப்போம்.

தமிழர்களின் ஒவ்வொரு விழா, சடங்குக்குப் பின்னணியிலும் பாரம்பரியமும், வரலாறும் இணைந்து இருக்கும். அவற்றில் ஒன்றுதான் பொங்கல் பண்டிகை. அக்காலத்தில் உழவுக்கு உதவி செய்த இயற்கை, காளைகள் என அனைவருக்கும் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தமிழர்களின் முதன்மையான திருநாளாக திகழ்ந்து வருகிறது.

புத்தாடை அணிந்து பொங்கல் சமைத்து செங்கரும்பு சுவைத்து, உற்றார் உறவினரோடு கூடுவது தனி இன்பம் தான்.

அதுவும் புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு பொங்கல் பண்டிகை என்றால் தனி குஷிதான். உலகிலேயே உயர்வான சொந்தமாக கருதப்படுவது ரத்த சொந்தம் தான்.ஆம். தாய் வீட்டில் இருந்து வரும் சீர் எப்போதுமே உயர்வானது தான். தாய்வழி உறவில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவ்து பொங்கல் சீர்வரிசை தான்.

திருமணமாகிச் சென்ற பெண்கள், கணவரின் வீட்டில் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடத் தேவையான அத்தனை பொருள்களையும் தாய் வீட்டில் இருந்து சீர்வரிசையாக அனுப்பி வைக்கும் வழக்கம் தமிழரிடத்தில் பாரம்பரியமாக இருந்து வருகிறது.

சில குடும்பங்களில் திருமணமான முதல் ஆண்டு கொண்டாடும் தலைப்பொங்கலுக்கு மட்டும் சீர் வரிசை தருவார்கள். ஆனால் சில குடும்பங்களில் ஆண்டுதோறும் சீர்வரிசை அளிப்பார்கள். தாய், தந்தை மறைந்தாலும் பாசமலரை மறக்காத உடன்பிறப்புக்கள் ஆண்டுதோறும் சீர்வரிசை அளித்து பிறந்த வீட்டு கௌரவத்தை நிலைநாட்டுவார்கள். பொங்கல் சீர் என்பதில் பிறந்த வீட்டின் கௌரவம் அடங்கியுள்ளதாக பரவலாக நம்பப்படுகிறது.

அந்த காலத்தில் கட்டுக்கட்டாய் கரும்புகள், மூட்டை மூட்டையாய் பச்சரிசி, வெல்லம், உப்பு, மஞ்சள், காய்கறிகள், வாழைத்தார், மண்பானைகள், புத்தாடைகள் மற்றும் பொங்கல் வைப்பதற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் தலைச்சுமையாய் நடந்து சென்றோ, குதிரை மற்றும் மாட்டு வண்டிகளில் கொண்டு சென்றோ மகளின் வீட்டில் பெற்றோர் அளித்து வந்தனர்.

குழந்தை பிறந்தால் பயன்படுமே என்பதற்காக கறவை மாடுகளையும் சிலர் சீராகக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது காலம் மாறி வருகிறது.

இவ்வளவு பொருள்களையும் கொண்டு சென்றால் எங்கு வைப்பது, யாரிடம் கொடுப்பது. அதற்குப் பதிலாக சீர் கொடுக்க ஆகும் செலவை அப்படியே பணமாகக் கொடுத்து விடுங்கள். தேவையானவற்றை நாங்களே வாங்கிக் கொள்கிறோம்’ என மகளோ, மருமகன் குடும்பத்தினரோ கேட்டுப் பெறும் நிலை உருவாகிவிட்டது. எனவே பணமாக கொடுக்கும் பழக்கம் பெருகி வருகிறது.

ஆனால் கிராமப்புறங்களில் இந்த வழக்கம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தொட்டுத் தொடரும் பந்தமாய் நீடித்து வரும் தமிழர்களின் பண்பாட்டு கலாச்சார நிகழ்வை எண்ணி பெருமை கொள்வோம். பொங்கலோ பொங்கல் என கொண்டாடி மகிழ்வோம். வாழ்க தமிழ், வளர்க நமது கலாச்சாரம்.

Tags: pongal gift to daughtersthai masamPongal festivalthai pongalpongal
Share
Tweet
SendShare
Previous Post

பொங்கல் பண்டிகையின் ஆன்மீக முக்கியத்துவம்!

Next Post

பொங்கல் பண்டிகையின் சிறப்பு குறித்து பார்ப்போம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies