பங்களாதேஷ் பொதுத்தேர்தல்: பல இடங்களில் வன்முறை!
Jan 14, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பங்களாதேஷ் பொதுத்தேர்தல்: பல இடங்களில் வன்முறை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 7, 2024, 04:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பங்களாதேஷ் பொதுத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை விடுதலை செய்யக்கோரி பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

அண்டை நாடான பங்களாதேஷில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனாவே மீண்டும் வெற்றி பெற்று, தொடர்ந்து 4-வது முறையாக பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு வீட்டுக் காவலில் இருக்கும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சி (பி.என்.பி.), ஒரு நடுநிலை அரசை நிறுவிய பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

இதற்கு ஆளும் கட்சி மறுப்புத் தெரிவித்ததால், 48 மணி நேர தேர்தல் புறக்கணிப்புக்கு நேற்று அழைப்பு விடுத்தது. இதையடுத்து, கலீதா ஜியாவின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் நேற்று முதல் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிட்டகாங், காசிபூர் நகரில் வாக்குச்சாவடி மையங்களாக அமைக்கப்பட்டிருந்த 5 பள்ளிக் கூடங்களுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். கடந்த 16 மணி நேரத்தில் 4-க்கும் மேற்பட்ட தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறியதாக தீயணைப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

முன்னதாக, ஜெஸ்ஸோர் – டாக்கா பெனாபோல் விரைவு இரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர். எனினும், வன்முறையையும் மீறி பங்களாதேஷில் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பொதுத்தேர்தல் நடைபெறும் சூழலில், தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செயலி செயலிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, தேர்தல் நடைபெறும் நாளில் வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் மையங்களைக் கண்டறிய இந்த செயலியைப் பயன்படுத்தலாம் என்று தேர்தல் கமிஷன் செயலாளர் ஜஹாங்கீர் ஆலம் அறிவித்திருந்தார்.

ஆனால், இன்று வாக்குச் சாவடி மையங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான விவரங்களைக் கண்டறிய வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய Tk21 கோடி செயலி, நேற்று முதல் வேலை செய்யவில்லை.

நேற்று மாலையில் இருந்து பலமுறை முயற்சித்தபோதும், செயலியை அணுக முடியவில்லை என்று வாக்காளர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் சிஸ்டம் மேலாளர் அஷ்ரப் ஹொசைன், செயலியை அணுகுவதில் உள்ள சிக்கல் தற்காலிகமானது.

இது விரைவில் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயலியை அணுக முடியாததற்கு, ஒரே நேரத்தில் பலரும் பயன்படுத்த முயன்றது கூடக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க, இன்று பொதுத்தேர்தலில் வாக்களித்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்தியா நமது நம்பகமான நண்பன். எங்கள் விடுதலைப் போரின்போது, அவர்கள் எங்களுக்கு ஆதரவளித்தனர்.

1975-ம் ஆண்டுக்குப் பிறகு, நாங்கள் எங்கள் முழு குடும்பத்தையும் இழந்தபோது, அவர்கள் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். இந்திய மக்களுக்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: BangaladeshPM Sheikh HasinaGeneral ElectionCasts Vote
ShareTweetSendShare
Previous Post

டேவிட் வார்னருக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து !

Next Post

நாளை இங்கிலாந்து செல்கிறார் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies