அயோத்தி தரிசனத்துக்கு 50 லட்சம் பேர்: பா.ஜ.க. தீவிர ஏற்பாடு!
Oct 25, 2025, 04:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி தரிசனத்துக்கு 50 லட்சம் பேர்: பா.ஜ.க. தீவிர ஏற்பாடு!

Web Desk by Web Desk
Jan 16, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவைத் தேர்தலுக்குள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50 லட்சம் பேரை, அயோத்திக்கு அழைத்துச் சென்று இராமர் கோவிலில் தரிசனம் செய்ய வைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமான அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதாகும். எனினும், இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகாததால், வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.

இதன் பிறகு, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று பா.ஜ.க. 2-வது முறையாக ஆட்சி அமைத்தது. இந்த சூழலில், 2019 நவம்பர் மாதம் அயோத்தி இராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு வெளியானது. இத்தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக வந்தது.

இதையடுத்து, அயோத்தி இராமஜென்ம பூமியில் இராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சியில் மத்திய பா.ஜ.க. அரசு களமிறங்கியது. இதற்காக அறக்கட்டளை ஒன்றும் நியமிக்கப்பட்டு, நிதியும் திரட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாயில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில்தான், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, சுமார் 50 லட்சம் பக்தர்களையாவது அழைத்துச் சென்று அயோத்தி இராமர் கோவிலில் தரிசனம் செய்ய வைத்துவிட வேண்டும் என்று பா.ஜ.க. முடிவு செய்திருக்கிறது.

இது தொடர்பாக, புதுடெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 150 பேரை அழைத்து பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்.

இக்கூட்டத்தில், இராமர் கோவில் திறப்பு விழா மற்றும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான வியூகங்கள் ஆலோசிக்கப்பட்டிருக்கின்றன. அப்போது, திறப்பு விழா, கும்பாபிஷேகம் ஆகியவற்றை மத்திய அரசும், இராமர் கோவில் அறக்கட்டளையும் கவனித்துக் கொள்ளும்.

ஆனால், இதன் பிறகு அயோத்தியை பிரபலமடையச் செய்வது நமகு கைகளில்தான் இருக்கிறது. ஆகவே, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் குறைந்தது 1.50 லட்சம் பக்தர்களை அயோத்திக்கு அழைத்துச் செல்லும் பணியில் இறங்க வேண்டும்.

அதேசமயம், அயோத்திக்குச் செல்ல வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், அதற்கான வசதி அவர்களிடம் இருக்காது. அப்படிப்பட்டவர்களை தேடிப்பிடித்து கட்டாயம் அயோத்தி பயணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

முக்கியமாக, இராமர் கோவில் தரிசனத்துக்கு அழைத்து வரும் விஷயத்தில் ஜாதி ரீதியாக எந்தவித பாகுபாடும் பார்க்கக் கூடாது. இது தொடர்பாக, வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரை பிரச்சார இயக்கத்தை நடத்த வேண்டும்.

இதன் மூலம், ஒவ்வொரு நாளும் 50,000 பேரை அயோத்திக்கு அழைத்து வந்து தரிசனம் செய்ய வைக்க வேண்டும். அதேபோல, தங்களது சொந்த செலவில் வரும் பக்தர்களுக்கு, தங்குமிடம் உள்ளிட்ட மற்ற ஏற்பாடுகள் அனைத்தையும் பா.ஜ.க.வே ஏற்றுக் கொள்ளும்.

அயோத்திக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, நாடு முழுதும் 430 நகரங்களில் இருந்து, குறிப்பட்ட நாட்களில் மட்டும் அயோத்திக்கு 35 இரயில்கள் பிரத்யேகமாக இயக்கப்படும். ஆகவே, லோக்சபா தேர்தலுக்குள் எப்படியும் நாடு முழுவதும் இருந்து 50 லட்சம் பேரையாவது தரிசனத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இதற்காக, மாநில அளவில் தொடங்கி, சட்டப்பேரவை தொகுதி அளவு வரை ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பேற்று செயல்படுவார்கள். இதில், முக்கியமான விஷம் என்னவென்றால், அயோத்திக்கு பக்தர்களை அழைத்து வரும் விவகாரத்தில் எக்காரணம் கொண்டும் பா.ஜ.க. கொடியை பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர, திறப்பு விழாவை தீபாவளிப் பண்டிகையைப்போல கொண்டாட வேண்டும். கும்பாபிஷேக நாள் மட்டுமல்லாது, வரும் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 2 வாரங்களுக்கு இந்த பிரம்மாண்ட நிகழ்வை கொண்டாடி மகிழ வேண்டும்.

இந்நாட்களில் நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகள், அவரவர் பகுதிகளில் இருக்கும் கோவில்களை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். திறப்பு விழா தினத்தன்று மாலை வேளையில் ஒவ்வொருவர் வீட்டிலும் 5 தீபங்களை ஏற்ற வேண்டும்.

இவை ‘இராம ஜோதிகள்’ என்று அழைக்கப்படும். இவற்றை பக்தர்களும், பா.ஜ.க.வினரும் குடும்பத்துடன் வணங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: bjpRam TempleDiscussAyodya50 lakhs people
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாட்டில் ‘பொங்கல்’ மற்ற மாநிலங்களில்?

Next Post

அயோத்தியில் இருந்து இராமஜோதி எடுத்து வந்த இஸ்லாமிய பெண்கள் யார்?

Related News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies