9-ம் தேதி - என்ன செய்யப்போகிறது தமிழக அரசு!
Jul 26, 2025, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

9-ம் தேதி – என்ன செய்யப்போகிறது தமிழக அரசு!

Web Desk by Web Desk
Jan 7, 2024, 07:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் தங்களது நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9, 2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக, ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையைத் துவக்க வேண்டும், ஓய்வு பெற்றோருக்கு 90 மாதங்களாக வழங்காத பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்டவை பிரதான கோரிக்கைகள்.

தங்களது நீண்ட நாள் கோரிக்கைை தமிழக அரசிடம் வலியுத்தி ஆர்பாட்டம், உண்ணாவிரதம், தொடர் போராட்டம் என போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

எப்போது எல்லாம் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டுகிறதோ அப்போது எல்லாம், சத்தமின்றி, பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வைத்துவிடும் திமுக அரசு.

அவ்வப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்து, வெள்ளைக்கொடி பறக்கும் நேரத்தில் மீண்டும் யூடர்ன் அடிக்கும். இதனால், ஆவேசம் அடையும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், இனி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என காம்பண்ட் சுவரை எட்டிக்குதித்து வெளியே வருவார்கள்.

இப்படித்தான், புலி வரும் கதையாக, தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்துவிட்டு, எஸ்கேப் ஆகும் தமிழக அரசை கண்டித்து, வரும் 9 -ம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் வரும் 9 -ம் தேதி தவறாமல் பணிக்கு வர வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இப்பிரச்சனையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்கங்களுடன் கடந்த 5 -ம் தேதி அன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மீண்டும் 7 -ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்த, ஆனால் நடைபெறவில்லை. மாறாக 8-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அமைச்சர் சிவசங்கர் தள்ளிப்போட்டுள்ளார்.

ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, ஆட்சியில் இல்லாவிட்டால் ஒரு பேச்சு என நேரத்திற்கு தகுந்த மாதிரி திமுகவும், அதன் தலைவர்களும் செயல்பட்டு வருகின்றனர். இதை நாங்கள் சும்மாவிடப்போவதில்லை. 9-ம் தேதி பாருங்கள் எங்கள் ஆட்டத்தை என மீசையை முறுக்கின்றனர் தொழிலாளர்கள். தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று பார்ப்போம்.

Tags: transport corporationtalks postponedtamil nadu governmentminister sivasankar
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி குறித்து விமர்சனம்: மாலத்தீவு முன்னாள் அதிபர் கண்டனம்!

Next Post

குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை : சிகிச்சைக்குப் பின் பிரதமரை அடையாளம் கண்ட குழந்தை !

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies