பிரதமர் மோடி குறித்து விமர்சனம்: மாலத்தீவு 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட்!
Mar 15, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி குறித்து விமர்சனம்: மாலத்தீவு 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 8, 2024, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து விமர்சனம் செய்திருந்த மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார். அப்போது, பிரதமர் மோடி, காலை நேரத்தில் லட்சத்தீவு கடற்கரையில் வாக்கிங் சென்றார். மேலும், ஸ்நோர்கெலிங் செய்து மகிழ்ந்தார்.

இதன் பிறகு, டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, லட்சத்தீவின் சிறப்பு அம்சங்கள் குறித்தும், தனது பயண அனுபவங்கள் குறித்தும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அப்பதிவில், “லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல.

காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு. மேலும், இது மக்களுக்கான சான்று. ஆகவே, இந்திய மக்கள் அனைவரும் லட்சத்தீவுக்கு ஒரு முறையேனும் பயணம் மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.

பிரதமரின் இந்தப் பதிவு குறித்து, மாலத்தீவை ஆட்சி செய்து வரும் பி.பி.எம். கட்சியின் கவுன்சில் உறுப்பினர் ஜாஹித் ரமீஸ், தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த நடவடிக்கை என்பது பெரியதுதான். எனினும், எங்களுடன் போட்டியிடுவது என்பது ஒரு மாயை போன்றது.

ஏனென்றால் நாங்கள் வழங்கும் ஆபர்களைபோல் அவர்கள் எப்படி வழங்க முடியும்? எப்படி சுத்தமாக இருக்க முடியும்? மேலும், அறைகளில் இருந்து நிரந்தரமாக வரும் கெட்ட நறுமணம் பெரிய பின்னடைவாக இருக்கும்” என்று இந்தியர்களை கேலி செய்தும், இனவெறியைக் காட்டும் வகையிலும் பதிவிட்டிருந்தார்.

மேலும், மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியா மாலத்தீவை குறிவைக்கிறது. கடற்கரை சுற்றுலாவில் மாலத்தீவுடனான போட்டியில் இந்தியா பல சவால்களை சந்திக்க வேண்டியதிருக்கும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்திருந்தார்.

அதேபோல, மாலத்தீவு அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மால்ஷா ஷரீப் மற்றும் ஹாசன் சிகான் ஆகியோரும் பிரதமர் மோடியின் பயணம் குறித்து கேலி, கிண்டல் செய்யும் விதமாக கருத்துப் பதிவிட்டிருந்தனர். மாலத்தீவு அமைச்சர்களின் இப்பதிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பிரதமர் மோடி குறித்த விமர்சனத்துக்கு, மாலத்தீவு முன்னாள் பிரதமர் முகமது நஷீத் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதோடு, இந்தியா நமது நெருங்கிய நண்பர் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, அமைச்சர்கள் கூறியது அவர்களது தனிப்பட்ட கருத்து என்றும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாலத்தீவு அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் இந்தியர்கள் குறித்து விமர்சன பதிவுகளை வெளியிட்ட மரியம் ஷியூனா, மால்ஷா ஷரீப் மற்றும் ஹாசன் சிகான் ஆகிய 3 அமைச்சர்களையும் சஸ்பெண்ட் செய்து மாலத்தீவு அரசு அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.

Tags: MinistersuspendedMaldivesInsulting PM Modi
ShareTweetSendShare
Previous Post

99% தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகப் பொய் சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! – அண்ணாமலை

Next Post

பூட்டானை ஆக்கிரமிக்கும் சீனா: அரச குடும்ப நிலமும் அபேஸ்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies