பூட்டானை ஆக்கிரமிக்கும் சீனா: அரச குடும்ப நிலமும் அபேஸ்!
Sep 9, 2026, 11:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூட்டானை ஆக்கிரமிக்கும் சீனா: அரச குடும்ப நிலமும் அபேஸ்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 8, 2024, 11:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பூட்டானுடனான எல்லையை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் சீனா, அந்நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பூட்டான் அரச குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தையும் சீனா ஆட்டைய போட்டிருக்கிறது.

சீனாவை பொறுத்தவரை, தனது அண்டை நாட்டு எல்லைகளை கபளீகரம் செய்வதிலேயே குறியாக இருக்கிறது. குறிப்பாக, இந்தியா, மியான்மர், வியட்நாம், நேபாள், பூட்டான் மற்றும் கடல் பகுதியில் ஜப்பான், பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேஷியா என தனது ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தி வருகிறது.

அதேபோல, திபெத் பீடபூமியைக் கைப்பற்றும் நோக்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால், சீனாவுக்கும், அண்டை நாடுகளுக்கும் எல்லை தொடர்பான மோதல்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில், பூட்டானை தனது ஆக்டோபஸ் கரங்களால் சீனா ஆக்கிரமித்து வருகிறது.

பூட்டானை எடுத்துக் கொண்டால், நம் நாட்டின் தலைநகர் டெல்லியைவிட பரப்பளவில் சிறியது. அப்படி இருக்க, பூட்டானின் வடக்கு, மேற்கு, தென் மேற்கு பகுதிகளை சீனா கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகிறது. மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் புதிய கட்டடங்களையும் கட்டி வருகிறது.

இந்த நிலையில், பூட்டானின் பெயுல் கென்பஜாங்க் எனப்படும் கலாசார தொடர்புடைய நிலப்பகுதியை தற்போது சீனா ஆக்கிரமித்து வருகிறது. இதையடுத்து, அப்பகுதியில் ஏரியை ஒட்டியுள்ள இடங்களில் ஏராளமான குடியிருப்புக் கட்டடங்களை சீனா கட்டி வருகிறது.

பொதுவாகவே, சீனா பிற நாடுகளை ஆக்கிரமிக்கும்போது, அப்பகுதிகளில் கட்டடங்களை கட்டி, தனது நாட்டு மக்களை அங்கு குடியமர்த்துவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அதேபோல, பூட்டானின் ஆக்கிரமிப்புப் பகுதியிலும் சீனா கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது, ‘சாட்டிலைட்’ படங்கள் வாயிலாக தெரியவந்திருக்கிறது.

இந்த சூழலில், சீனா ஆக்கிரமித்த அந்தப் பகுதி, பூட்டான் அரசக் குடும்பத்துக்கு சொந்தமானது என்பது தற்போது தெரியவந்திருக்கிறது. ஆனாலும், அந்த ஆக்கிரமிப்பை எதிர்க்க முடியாத நிலையில் பூட்டான் இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். பூட்டானுடனான எல்லையை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தையில் சீனா ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், இதுபோல அந்நாட்டின் எல்லைகளை ஆக்கிரமிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

Tags: chinaOccupiedBhutan land
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி குறித்து விமர்சனம்: மாலத்தீவு 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட்!

Next Post

புரோ கபடி : தமிழ் தலைவாஸ் தொடர் தோல்வி!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies