இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் டி20 : ஆஸ்திரேலியா வெற்றி!
Jan 14, 2026, 08:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் டி20 : ஆஸ்திரேலியா வெற்றி!

Murugesan M by Murugesan M
Jan 8, 2024, 11:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட் இரண்டாம் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

அதில் இரண்டாவது டி20 போட்டி நேற்று மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணிக்கு ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்களாக விழுந்தது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷாபாலி வர்மா 1 ரன்னில் ஆட்டமிழக்க அவரது தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா 3 பௌண்டரீஸ் அடுத்து 13 ரங்களில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்ம்ரிதி மந்தனா 8வது ஓவரில் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இப்படி இந்திய அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தப்போது ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா கூட்டணி நிதானமாக விளையாடி 50 ரன்களை எடுத்தனர்.

இதில் ரிச்சா கோஷ் 23 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, தீப்தி ஷர்மா 5 பௌண்டரீஸ் உட்பட 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்தது.

ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஜார்ஜியா வேர்ஹாம், அன்னாபெல், கிம் கார்த் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதை தொடர்ந்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய அலிசா ஹீலி 4 பௌண்டரீஸ் உட்பட 26 ரன்களும், பெத் மூனி 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய தஹ்லியா மெக்ராத் 19 ரன்களும், ஆஷ்லீ கார்ட்னர் 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 18 ரன்களும், எல்லிஸ் பெர்ரி 34 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனால் ஆஸ்திரேலியா மகளிர் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்களும், பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பட்டேல் தலா 1 விக்கெட்களும் எடுத்தனர். இப்போட்டியில் ஆட்டநாயகி விருது ஆஸ்திரேலியா அணியின் கிம் கார்துக்கு வழங்கப்பட்டது.

Tags: india vs Australiaindian womens cricket team
ShareTweetSendShare
Previous Post

திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

சென்னை புத்தகக் கண்காட்சி இன்று செயல்படாது!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies