போருக்கு தயாராகிவிட்டதா வடகொரியா? – தென்கொரியாவை நோக்கி குண்டுகள் வீச்சு!
Sep 9, 2025, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போருக்கு தயாராகிவிட்டதா வடகொரியா? – தென்கொரியாவை நோக்கி குண்டுகள் வீச்சு!

Web Desk by Web Desk
Jan 8, 2024, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடகொரியா தனது மேற்கு கடற்கரை பகுதியில் இருந்து, தென்கொரியாவை நோக்கி 90 பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகளை விதித்த போதிலும், வடகொரியா அதைக் கண்டுக் கொள்ளாமல், தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில், வடகொரியா தனது மேற்கு கடற்கரை பகுதியில் இருந்து தென்கொரியாவை நோக்கி 90 பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.

தென் கொரியாவின் எல்லைத் தீவான யோன்பியாங் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி நேற்று மாலை, பீரங்கித் தாக்குதல்கள் நடந்ததைக் கண்டறிந்ததாக கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.

வடகொரியாவின் இந்த குண்டுவீச்சு சம்பவத்தில், தென்கொரிய பொதுமக்களுக்கோ அல்லது இராணுவத்திற்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். மேலும், தென்கொரிய இராணுவம் பதில் பயிற்சிகளை நடத்தத் திட்டமிடவில்லை என்று தெரிவித்தனர்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை தென்கொரியாவின் யோன்பியாங் தீவுப்பகுதியை நோக்கி, 200-க்கும் மேற்பட்ட குண்டுகளை வடகொரியா வீசி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Tags: north koreaWAR
ShareTweetSendShare
Previous Post

இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்!

Next Post

புதிய சாதனை படைத்த புஜாரா!

Related News

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies