விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது எப்போது? இஸ்ரோ தலைவர் பதில்!
Oct 26, 2025, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது எப்போது? இஸ்ரோ தலைவர் பதில்!

Web Desk by Web Desk
Jan 8, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரோவின் தொடர் வெற்றிகள், இளைஞர்களிடம் தொழில்நுட்ப ஆர்வத்தையும், தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கி இருப்பதாகத் தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், அடுத்தாண்டு விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் விண்வெளி, பாதுகாப்புத் துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசுகையில், “சந்திரயான்-2 தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து, தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தோம்.

இதனால்தான் அடுத்த 2 ஆண்டுகளில் வெற்றியடைய முடிந்தது. உலகிலேயே இந்தியாதான் மிகக் குறைந்த செலவில் ராக்கெட் அனுப்புகிறது. இதற்கு ஹார்ட்வேர் பயன்பாட்டை குறைப்பதே காரணம்.

‘சந்திரயான்-3’ வெற்றி, இந்திய மக்களின் இதயங்களில் உணர்ச்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்தது. பிரதமர் நரேந்திர மோடி கூறியதுபோல, சந்திரயான்-3 வெற்றி அனைவருக்குமானது.

இஸ்ரோவின் தொடர் வெற்றிகள், இந்திய இளைஞர்களை தொழில்நுட்பம் நோக்கி திருப்பி வைத்திருக்கிறது. குறிப்பாக, சந்திரயான் வெற்றிக்குப் பிறகு விண்வெளி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற படிப்புகளை படிக்க இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கல்வித்துறையில் மட்டுமல்லாது, ஏராளமான தொழில் வாய்ப்புகளையும் இஸ்ரோவின் வெற்றி உருவாக்கி இருக்கிறது. விண்வெளி துறையில் தனியார் முதலீடு செய்வதற்கான சூழலை இஸ்ரோ உருவாக்கி இருக்கிறது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் விண்கலம் 2025-ல் அனுப்பப்படும். இத்திட்டத்தில் மனித ரோபோ அனுப்பும் ‘வியோமித்ரா’ திட்டமும் அடங்கும்.

குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள இடம், சிறிய வகை ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்ப பொருத்தமானதாக இருக்கும். அடிக்கல் நாட்டப்பட்டதும் 2 ஆண்டுகளில் அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும்” என்றார்.

Tags: ISROSomnathChariman
ShareTweetSendShare
Previous Post

லக்னோவில் ஜனவரி 22ஆம் தேதி இறைச்சிக்கடைகள் அடைப்பு!

Next Post

விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்!

Related News

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies