இனி பஸ்கள் ஓடாது - வெடித்தது தொழிலாளர்கள் போராட்டம்!
Jul 26, 2025, 07:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இனி பஸ்கள் ஓடாது – வெடித்தது தொழிலாளர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Jan 8, 2024, 08:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் தங்களது நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி  9, 2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

குறிப்பாக, ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையைத் துவக்க வேண்டும், ஓய்வு பெற்றோருக்கு 90 மாதங்களாக வழங்காத பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்டவை பிரதான கோரிக்கைகள்.

தங்களது நீண்ட நாள் கோரிக்கைை தமிழக அரசிடம் வலியுத்தி ஆர்பாட்டம், உண்ணாவிரதம், தொடர் போராட்டம் என போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

எப்போது எல்லாம் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டுகிறதோ அப்போது எல்லாம், சத்தமின்றி, பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வைத்துவிடும் திமுக அரசு.

அவ்வப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்து, வெள்ளைக்கொடி பறக்கும் நேரத்தில் மீண்டும் யூடர்ன் அடிக்கும். இதனால், ஆவேசம் அடையும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், இனி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என காம்பண்ட் சுவரை எட்டிக்குதித்து வெளியே வருவார்கள்.

இப்படித்தான், புலி வரும் கதையாக, தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்துவிட்டு, எஸ்கேப் ஆகும் தமிழக அரசை கண்டித்து, வரும் 9 -ம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் வரும் 9 -ம் தேதி தவறாமல் பணிக்கு வர வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இப்பிரச்சனையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்கங்களுடன் கடந்த 5 -ம் தேதி அன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மீண்டும் 7 -ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்த, ஆனால் நடைபெறவில்லை. மாறாக 8-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அமைச்சர் சிவசங்கர் தள்ளிப்போட்டார்.

இந்த நிலையில், இன்று ஆவலுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு சென்ற தொழிற்சங்க நிர்வாகிகள், பெரும் ஏமாற்றம் அடைந்தனர். காரணம், அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை படுதோல்வி அடைந்தது.

இதனால், திட்டமிட்டபடி ஜன.9-ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெரும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் பேருந்து இயங்காத நிலை உருவாகியுள்ளது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் எல்லாம் பீதியில் உள்ளனர். ஜனவரி 9-ம் தேதி முதல் திமுகவால் தமிழக மக்களுக்கு மேலும் தொல்லைகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, ஆட்சியில் இல்லாவிட்டால் ஒரு பேச்சு என நேரத்திற்கு தகுந்த மாதிரி திமுகவும், அதன் தலைவர்களும் செயல்பட்டு வருகின்றனர். இதை நாங்கள் சும்மாவிடப்போவதில்லை. இனி எங்கள் ஆட்டத்தை பாருங்கள் என மீசையை முறுக்கின்றனர் தொழிலாளர்கள்.

Tags: Chennaibus stop
ShareTweetSendShare
Previous Post

முரசொலி நில விவகாரம் – ஜனவரி 10 -ல் தீர்ப்பு!

Next Post

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் மற்றொரு வீரர்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies