ஜன் ஒளஷதி கேந்திரா மூலம் ஏழைகளின் ரூ.26,000 கோடி சேமிப்பு: அமித்ஷா!
Aug 18, 2025, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜன் ஒளஷதி கேந்திரா மூலம் ஏழைகளின் ரூ.26,000 கோடி சேமிப்பு: அமித்ஷா!

Web Desk by Web Desk
Jan 9, 2024, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜன் ஔஷதி கேந்திரா மூலம், கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களின் சுமார் 26,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

புதுடெல்லியில் முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்களின் (பி.ஏ.சி.எஸ்.) தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு, பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி கேந்திராவின் சிறந்த செயல்பாட்டிற்கான ஸ்டோர் குறியீடுகளை 5 மாநிலங்களில் உள்ள பி.ஏ.சி.எஸ். நிறுவனங்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அமித்ஷா, “இதுவரை அரசாங்கத்தின் ஜன் ஔஷதி கேந்திராக்கள் நகர்ப்புற ஏழைகளுக்கு பயனளிக்கும் வகையில் பெரும்பாலும் நகரங்களில் திறக்கப்பட்டன.

இதன் மூலம் 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலான மருந்துகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. அந்த வகையில், கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களின் சுமார் 26,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது, இந்த நன்மை கிராமப்புற ஏழைகளுக்கும் கிடைக்கும் வகையில், ஜன் ஔஷதி கேந்திராக்கள் கிராமப் புறங்களிலும் விரிவுபடுத்தப்படுகிறது. கடந்த 6 மாதங்களில் பி.ஏ.சி.எஸ்.லிருந்து 4,470 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 2,373 பி.ஏ.சி.எஸ்.களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இவற்றில் 241 ஜன் ஔஷதி கேந்திராக்கள் இயக்கத் தொடங்கி இருக்கின்றன.

கிராமப்புறங்களில் இந்த விற்பனை நிலையங்கள் திறக்கப்படுவதால், மக்கள் பொது மருந்துகளை மலிவு விலையில் வாங்கலாம். உதாரணமாக, வெளிச்சந்தையில் 2,250 ரூபாய்க்கு விற்கப்படும் புற்றுநோய் மருந்துகள், வெறும் 250 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. பெண்களும்கூட, இந்த மையங்களில் 1 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்களை வாங்கலாம்.

மேலும், மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத், மிஷன் இந்திரதனுஷ், ஜல் ஜீவன் மிஷன், டிஜிட்டல் ஹெல்த், மலேரியா ஒழிப்பு மிஷன், டிபி முக்த் பாரத் ஆகிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த முயற்சிகள் நாட்டின் சுகாதாரத்தை பெருமளவில் மாற்றியுள்ளன” என்றார்.

தொடர்ந்து பேசிய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “கடந்த சில மாதங்களில் மட்டும் 4,000-க்கும் மேற்பட்ட பி.ஏ.சி.எஸ்.கள் ஆன்லைனில் பதிவு செய்தன. இவற்றில் 2,300-க்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதில், 500 பி.ஏ.சி.எஸ்.கள் ஜன் ஔஷதி கேந்திராக்களை தொடங்கி இருக்கின்றன.

நாட்டில் 10,500-க்கும் மேற்பட்ட ஜன் ஔஷதி கேந்திரங்கள் இயங்கி வருகின்றன. இவை 1,965-க்கும் மேற்பட்ட உயர்தர மருந்துகள் மற்றும் 293 அறுவைச் சிகிச்சைக்கான உபகரணங்களை சந்தையில் கிடைக்கும் பிராண்டட் மருந்துகளின் விலையில் இருந்து 50 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டில், கூட்டுறவுத் துறை இணை அமைச்சர் பி.எல்.வர்மா, கூட்டுறவுச் செயலர் ஞானேஷ் குமார், மருந்துத் துறை செயலர் அருணிஷ் சாவ்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: Amit ShahHome ministeraddressesNational PACS Mega Conclave
ShareTweetSendShare
Previous Post

ஐஎன்எஸ் கப்ரா இலங்கையின் கொழும்பு துறைமுகம் சென்றது!

Next Post

கிழக்கு தைமூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies