161 அடி உயரம்... 5,000 கிலோ எடை... அயோத்திக்கு வந்த பிரம்மாண்ட கொடிமரம்!
Mar 15, 2026, 05:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

161 அடி உயரம்… 5,000 கிலோ எடை… அயோத்திக்கு வந்த பிரம்மாண்ட கொடிமரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 9, 2024, 04:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் இருந்து அயோத்தி இராமர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 161 அடி உயரத்தில் 5,000 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான கொடிமரம் அயோத்திக்கு வந்து சேர்ந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில், 3 அடுக்குகளுடன் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் குழந்தை இராமர் சிலை வரும் 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

அயோத்தி கோவில் எந்தளவுக்கு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறதோ, அதே அளவுக்கு அங்குள்ள ஒவ்வொரு அமைப்பும் பிரம்மாண்டமானதாக அமைக்கப்படுகிறது. அந்த வகையில், கோவிலுக்கு 400 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய பூட்டு, 2,100 கிலோ எடை கொண்ட மணி, 108 அடி நீளமுள்ள அகர்பத்தி என அனைத்தும் பிரம்மாண்டம் காட்டுகின்றன.

இந்த நிலையில், அயோத்தி இராமர் கோவில் கொடி மரமும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதும் உயரமான மரங்கள் தேடப்பட்டன. இறுதியாக, குஜராத் மாநிலத்தில் மரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கொடி மரம் தொடர்பான பணிகள் அகமதாபாத்தில் நடந்து வந்தது.

5,000 கிலோ எடை கொண்ட இந்த கொடி மரத்தி, தங்க முலாம் பூசப்பட்டு, பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், அக்கொடி மரத்தை அயோத்திக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, அந்த பிரம்மாண்ட கொடி மரத்தை குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் கடந்த 5-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த கொடி மரம் பிரம்மாண்டமான லாரியில் ஏற்றப்பட்டு அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த பிரம்மாண்ட கொடி மரம் அயோத்திக்கு வந்து சேர்ந்தது. இந்த கொடி மரத்தை அயோத்தியில் குழுமி இருக்கும் இராம பக்தர்கள் தொட்டு வணங்கி, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டு வரவேற்றனர்.

இந்த கொடி மரம் 44 அடி உயர வெண்கல கம்பத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால், இதன் மொத்த உயரம் 161 அடியாக இருக்கும். மேலும், இந்த கொடி மரம் அயோத்தி கோவிலில் 205 அடி உயரத்தில் மிகவும பிரம்மாண்டமாக நிறுவப்படும் என்கிறார்கள்.

Tags: GujratAyodyaBig Flagpole
ShareTweetSendShare
Previous Post

மோடிக்கு நிகரான தலைவர் யாரும் இல்லை – ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த தமிழக காங்கிரஸ் எம்பி!

Next Post

தமிழக அரசு ஈர்த்ததைவிட 5 மடங்கு முதலீடுகளை உத்தரப் பிரதேசம் ஈர்த்துள்ளது! – அண்ணாமலை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies