161 அடி உயரம்... 5,000 கிலோ எடை... அயோத்திக்கு வந்த பிரம்மாண்ட கொடிமரம்!
Jan 14, 2026, 08:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

161 அடி உயரம்… 5,000 கிலோ எடை… அயோத்திக்கு வந்த பிரம்மாண்ட கொடிமரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 9, 2024, 04:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் இருந்து அயோத்தி இராமர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 161 அடி உயரத்தில் 5,000 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான கொடிமரம் அயோத்திக்கு வந்து சேர்ந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில், 3 அடுக்குகளுடன் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் குழந்தை இராமர் சிலை வரும் 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

அயோத்தி கோவில் எந்தளவுக்கு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறதோ, அதே அளவுக்கு அங்குள்ள ஒவ்வொரு அமைப்பும் பிரம்மாண்டமானதாக அமைக்கப்படுகிறது. அந்த வகையில், கோவிலுக்கு 400 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய பூட்டு, 2,100 கிலோ எடை கொண்ட மணி, 108 அடி நீளமுள்ள அகர்பத்தி என அனைத்தும் பிரம்மாண்டம் காட்டுகின்றன.

இந்த நிலையில், அயோத்தி இராமர் கோவில் கொடி மரமும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதும் உயரமான மரங்கள் தேடப்பட்டன. இறுதியாக, குஜராத் மாநிலத்தில் மரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கொடி மரம் தொடர்பான பணிகள் அகமதாபாத்தில் நடந்து வந்தது.

5,000 கிலோ எடை கொண்ட இந்த கொடி மரத்தி, தங்க முலாம் பூசப்பட்டு, பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், அக்கொடி மரத்தை அயோத்திக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, அந்த பிரம்மாண்ட கொடி மரத்தை குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் கடந்த 5-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த கொடி மரம் பிரம்மாண்டமான லாரியில் ஏற்றப்பட்டு அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த பிரம்மாண்ட கொடி மரம் அயோத்திக்கு வந்து சேர்ந்தது. இந்த கொடி மரத்தை அயோத்தியில் குழுமி இருக்கும் இராம பக்தர்கள் தொட்டு வணங்கி, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டு வரவேற்றனர்.

இந்த கொடி மரம் 44 அடி உயர வெண்கல கம்பத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால், இதன் மொத்த உயரம் 161 அடியாக இருக்கும். மேலும், இந்த கொடி மரம் அயோத்தி கோவிலில் 205 அடி உயரத்தில் மிகவும பிரம்மாண்டமாக நிறுவப்படும் என்கிறார்கள்.

Tags: GujratAyodyaBig Flagpole
ShareTweetSendShare
Previous Post

மோடிக்கு நிகரான தலைவர் யாரும் இல்லை – ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த தமிழக காங்கிரஸ் எம்பி!

Next Post

தமிழக அரசு ஈர்த்ததைவிட 5 மடங்கு முதலீடுகளை உத்தரப் பிரதேசம் ஈர்த்துள்ளது! – அண்ணாமலை

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies