161 அடி உயரம்... 5,000 கிலோ எடை... அயோத்திக்கு வந்த பிரம்மாண்ட கொடிமரம்!
Apr 29, 2026, 09:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

161 அடி உயரம்… 5,000 கிலோ எடை… அயோத்திக்கு வந்த பிரம்மாண்ட கொடிமரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 9, 2024, 04:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் இருந்து அயோத்தி இராமர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 161 அடி உயரத்தில் 5,000 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான கொடிமரம் அயோத்திக்கு வந்து சேர்ந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில், 3 அடுக்குகளுடன் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் குழந்தை இராமர் சிலை வரும் 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

அயோத்தி கோவில் எந்தளவுக்கு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறதோ, அதே அளவுக்கு அங்குள்ள ஒவ்வொரு அமைப்பும் பிரம்மாண்டமானதாக அமைக்கப்படுகிறது. அந்த வகையில், கோவிலுக்கு 400 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய பூட்டு, 2,100 கிலோ எடை கொண்ட மணி, 108 அடி நீளமுள்ள அகர்பத்தி என அனைத்தும் பிரம்மாண்டம் காட்டுகின்றன.

இந்த நிலையில், அயோத்தி இராமர் கோவில் கொடி மரமும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதும் உயரமான மரங்கள் தேடப்பட்டன. இறுதியாக, குஜராத் மாநிலத்தில் மரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கொடி மரம் தொடர்பான பணிகள் அகமதாபாத்தில் நடந்து வந்தது.

5,000 கிலோ எடை கொண்ட இந்த கொடி மரத்தி, தங்க முலாம் பூசப்பட்டு, பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், அக்கொடி மரத்தை அயோத்திக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, அந்த பிரம்மாண்ட கொடி மரத்தை குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் கடந்த 5-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த கொடி மரம் பிரம்மாண்டமான லாரியில் ஏற்றப்பட்டு அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த பிரம்மாண்ட கொடி மரம் அயோத்திக்கு வந்து சேர்ந்தது. இந்த கொடி மரத்தை அயோத்தியில் குழுமி இருக்கும் இராம பக்தர்கள் தொட்டு வணங்கி, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டு வரவேற்றனர்.

இந்த கொடி மரம் 44 அடி உயர வெண்கல கம்பத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால், இதன் மொத்த உயரம் 161 அடியாக இருக்கும். மேலும், இந்த கொடி மரம் அயோத்தி கோவிலில் 205 அடி உயரத்தில் மிகவும பிரம்மாண்டமாக நிறுவப்படும் என்கிறார்கள்.

Tags: GujratAyodyaBig Flagpole
ShareTweetSendShare
Previous Post

மோடிக்கு நிகரான தலைவர் யாரும் இல்லை – ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த தமிழக காங்கிரஸ் எம்பி!

Next Post

தமிழக அரசு ஈர்த்ததைவிட 5 மடங்கு முதலீடுகளை உத்தரப் பிரதேசம் ஈர்த்துள்ளது! – அண்ணாமலை

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies