ஜல்லிக்கட்டில் கலக்கும் காளைகள் சாபம் பெற்றதா?
Sep 9, 2025, 09:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜல்லிக்கட்டில் கலக்கும் காளைகள் சாபம் பெற்றதா?

Web Desk by Web Desk
Jan 16, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை, தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் வெளி நாடுகளிலும் பல பெயர்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை வெறும் கொண்டாட்டம் மட்டும் அல்லாமல்ல, வழிபாட்டைத் தாண்டி அது சில புராணத்துடன் தொடர்புடையதாக உள்ளது.

அறுவடைத் திருவிழா தை முதல் நாளில் தொடங்குகிறது. எனவே இதை தைப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறத. இந்த பொங்கல் கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13 முதல் 16ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. போகி, பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், பொங்கல் பண்டிகையை நான்கு நாட்கள் கொண்டாடுகிறோரம்.

இந்நிலையில், மாட்டுப் பொங்கல் இரண்டு புராணங்களுடன் தொடர்புடையதாக உள்ளது.

பயிர்கள் செழிப்பாக வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் மாதம். அறுவடை செய்யும் விதமாகவும், பயிர் செய்ய உதவிய சூரிய கடவுள், மழை, விவசாயத்திற்கு உதவிய கால்நடைகள் மற்றும் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த பொங்கல் கொண்டாட்டம் பாரம்பரியங்களுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறைந்தது 2000 ஆண்டுகளாவது தொன்மையானது என நம்பப்படுகிறது.

இந்திரனுக்கு பசுக்கள் மூலம் பாடம் புகட்டிய கிருஷ்ணர்

கிருஷ்ண அவதாரத்தின் போது, அனைத்து தெய்வங்களை விட மிகவும் ஆணவமிகுந்தவராக இந்திரன் விளங்கினார். அவருக்கு பாடம் புகட்ட கிருஷ்ணர், கிராமத்தில் உள்ள அனைத்து மாடு மேய்ப்பவர்களையும் இந்திரனை வணங்குவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். கோபமடைந்த அவர், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய தனது மேகங்களை அனுப்பினார்.

அதனால் கிரமமே வெள்ளத்தில் மூழ்கியது. அதிலிருந்து அனைத்து உயிரினங்களையும், கிராம மக்களைக் காப்பாற்றக் கிருஷ்ணர் தனது சுண்டு விரலால் கோவர்த்தன மலையைத் தூக்கி காத்தருளினார்.

இந்திரன் தனது தவறை உணர்ந்து, பகவான் கிருஷ்ணரின் சக்தியை புரிந்து கொண்டான். இந்த சம்பவத்திற்கு பின்னர், கிருஷ்ணர் விஸ்வகர்மாவை அழைத்து, மீண்டும் துவாரகாவை அமைத்து மக்களை குடியமர்த்தும் படி கேட்டார். துவாரகையில் குடியேறிய பின்னர் மக்கள் தங்கள் பசுக்கள், காளைகளுடன் விவசாயம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.

சாபம் பெற்ற காளை :

மற்றொரு கதையின்படி, ஒரு சமயம் சிவபெருமான் தனது காளையை பூலோகத்திற்கு அனுப்பி சிவ பக்தரான பசவேஸ்வரரிடம் சென்று மனிதர்களை தினமும் எண்ணெய் தேய்த்து குளித்து, மாதம் ஒரு முறை மட்டுமே உணவு உண்ணும்படி கேட்டுக் கொண்டார்.

ஆனால் காளையோ அதை தற்செயலாக எதிர்மறையாகக் கூறிவிட்டார். அதையே பசவேஸ்வர் போதிக்க ஆரம்பித்தார். இதனால் கோபமடைந்த சிவபெருமான் காளை செய்த தவறுக்கு, நீ என்றென்றும் பூமியில் சென்று வாழும்படி சபித்தார்.

மேலும் விவசாயிகளுக்கு அதிக உணவு விளைவிக்க வயல்களை உழுவதற்கும், அவர்களுக்கு பயன்படும்படியாக வாழ காளையைக் கைலாயத்திலிருந்து விரட்டியடித்தார். அன்றிலிருந்து காளைகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Tags: jallikattu
ShareTweetSendShare
Previous Post

மாட்டுப் பொங்கல் விழாவும் அதன் சிறப்புகளும்!

Next Post

ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம்! – வாடிவாசலுக்கு மூடுவிழாவா?

Related News

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies