இரண்டாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்!
Jan 14, 2026, 10:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 இரண்டாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்!

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு முழுவதும் இன்று  இரண்டாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை, இதனால், பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள முடியாமல், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

தமிழகத்தில் உள்ள 23 போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இணைந்து சமீபத்தில் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 23 தொழிற்சங்கத்தினர் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பொங்கலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த வேலைநிறுத்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை தமிழக அரசுக்கும் தொழிற்சங்கங்கள் இடையே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும், அதில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை.

தொழிலாளர் நல ஆணையம் விடுத்த அழைப்பின் அடிப்படையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சுமுக முடிவு எடுக்கப்படும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. இருப்பினும், அதில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக அறிவித்த தொழிற்சங்கத்தினர், தமிழக அரசு ஒரே ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்றத் தயாராக இல்லை என்றும் இன்று முதல் பேருந்துகள் ஸ்டிரைக் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தது.

இந்தப் போராட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ள நிலையில், அதிகாலை முதல் பேருந்து சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஊர்களில் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி உள்ளன. பல பகுதிகளிலும் வழக்கமான எண்ணிக்கை காட்டிலும் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சில இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேநேரம் சில இடங்களில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்திரமேரூரில் மூன்று மணி நேரமாக பேருந்துகள் வராததால் ஆவேசமடைந்த பயணிகள் அரசு பேருந்து வழிமறித்து முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்திரமேரூரில் இருந்து புக்கத்துறை, செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம் மார்க்கமாக சென்னை செல்லும் அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள், சிகிச்சைக்காக செல்கின்ற நோயாளிகள் என பலரும் பேருந்து நிலையத்தில் காலை 4.30 மணியில் இருந்து 7.30 மணி வரை சுமார் 3 மணி நேரம் காத்திருந்தும் ஒரு பேருந்து கூட வராததால் ஆவேசமடைந்த பயணிகள் அரசு பேருந்து வழிமறித்து முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Tags: Transport workers strike for the second day!
ShareTweetSendShare
Previous Post

 குண்டூர் காரம் புரமோஷன் நிகழ்வில் தள்ளுமுள்ளு, தடியடி : காவலர் காயம்!

Next Post

அ.தி.மு.க.வுடன் கூட்டணி தேவையா? கருத்துக் கேட்கும் பா.ஜ.க.!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies