இரண்டாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்!
Nov 16, 2025, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 இரண்டாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்!

Web Desk by Web Desk
Jan 10, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு முழுவதும் இன்று  இரண்டாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை, இதனால், பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள முடியாமல், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

தமிழகத்தில் உள்ள 23 போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இணைந்து சமீபத்தில் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 23 தொழிற்சங்கத்தினர் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பொங்கலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த வேலைநிறுத்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை தமிழக அரசுக்கும் தொழிற்சங்கங்கள் இடையே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும், அதில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை.

தொழிலாளர் நல ஆணையம் விடுத்த அழைப்பின் அடிப்படையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சுமுக முடிவு எடுக்கப்படும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. இருப்பினும், அதில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக அறிவித்த தொழிற்சங்கத்தினர், தமிழக அரசு ஒரே ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்றத் தயாராக இல்லை என்றும் இன்று முதல் பேருந்துகள் ஸ்டிரைக் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தது.

இந்தப் போராட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ள நிலையில், அதிகாலை முதல் பேருந்து சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஊர்களில் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி உள்ளன. பல பகுதிகளிலும் வழக்கமான எண்ணிக்கை காட்டிலும் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சில இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேநேரம் சில இடங்களில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்திரமேரூரில் மூன்று மணி நேரமாக பேருந்துகள் வராததால் ஆவேசமடைந்த பயணிகள் அரசு பேருந்து வழிமறித்து முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்திரமேரூரில் இருந்து புக்கத்துறை, செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம் மார்க்கமாக சென்னை செல்லும் அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள், சிகிச்சைக்காக செல்கின்ற நோயாளிகள் என பலரும் பேருந்து நிலையத்தில் காலை 4.30 மணியில் இருந்து 7.30 மணி வரை சுமார் 3 மணி நேரம் காத்திருந்தும் ஒரு பேருந்து கூட வராததால் ஆவேசமடைந்த பயணிகள் அரசு பேருந்து வழிமறித்து முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Tags: Transport workers strike for the second day!
ShareTweetSendShare
Previous Post

 குண்டூர் காரம் புரமோஷன் நிகழ்வில் தள்ளுமுள்ளு, தடியடி : காவலர் காயம்!

Next Post

அ.தி.மு.க.வுடன் கூட்டணி தேவையா? கருத்துக் கேட்கும் பா.ஜ.க.!

Related News

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies