பழனி கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வணிக பயன்பாட்டிற்கு அனுமதி இல்லை - நீதிமன்றம் அதிரடி!
Jul 23, 2025, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பழனி கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வணிக பயன்பாட்டிற்கு அனுமதி இல்லை – நீதிமன்றம் அதிரடி!

Web Desk by Web Desk
Jan 10, 2024, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலை சுற்றி உள்ள வீதிகளை வணிக பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

முருகனின் ஆறுப்படை வீடுகளில், மூன்றாம் படை வீடாக பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, திருவிழா மற்றும் விஷேச நாட்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிரிவலப்பாதையை வலம் வருவது வழக்கம். முக்கியமாக கார்த்திகை மாதம் தொடங்கி தைப்பூசம், பங்குனி உத்திரம் என ஆறு மாதக்காலம், கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டமாகவே இருக்கும். கிரிவலப்பாதை முழுவதும் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், கிரிவலப்பாதையில் பக்தர்கள் செல்வதற்கு கடும் சிரமமாக உள்ளது.

இதுதொடா்பாக ஏற்கெனவே தாக்கல் செய்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை ஏற்கெனவே, விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு முன் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தரப்பில், தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றிலும் பிளாஸ்டிக், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அரசு தரப்பில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடக்காதவாறு தொடர் கண்காணிப்பு செய்யப்படுகிறது. 300 கடைகளில் 160 கடைகள் அகற்றப்பட்டன. மற்றவை பட்டா நிலத்தில் உள்ளன. எனவே, சர்வே செய்து உரிய நடவடிக்கை எடுக்க அவகாசம் தேவை என்று தெரிவித்தது.

இதுகுறித்து பேசிய நீதிபதிகள், நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் இவ்விவகாரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க அரசு தரப்பு தவறிவிட்டது. இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய நிலை உருவாகும். பழனி நகராட்சி நிர்வாக அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதுபோல் தெரிகிறது.

இது ஆக்கிரமிப்பாளர்களை மறைமுகமாக ஊக்குவிப்பதுபோல் உள்ளது. நிரந்தர கட்டுமான ஆக்கிரமிப்புகளை சர்வே செய்து 10 நாட்களில் அகற்ற வேண்டும். கிரிவலப்பாதைகளில் வாகனங்களை நுழையவிடக் கூடாது. அப்பகுதியில், நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் சோதனைச் சாவடி, தற்காலிக தடுப்புகள் அமைக்க வேண்டும். மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். வணிக நடவடிக்கைகளை அனுமதிக்கக்கூடாது என்று கூறி வழக்கை ஜனவரி 23-க்கு ஒத்தி வைத்தனர்.

Tags: palani temple
ShareTweetSendShare
Previous Post

ஏவுகணையுடன் தயாரான இந்தியா: நடுநடுங்கிய இம்ரான் கான்: நடந்தது என்ன?

Next Post

 குண்டூர் காரம் புரமோஷன் நிகழ்வில் தள்ளுமுள்ளு, தடியடி : காவலர் காயம்!

Related News

நான்கு நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies