நயன்தாராவின் அன்னபூரணி படத்திற்கு எதிராக வழக்கு பதிவு!
Sep 9, 2025, 08:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நயன்தாராவின் அன்னபூரணி படத்திற்கு எதிராக வழக்கு பதிவு!

Web Desk by Web Desk
Jan 10, 2024, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் நடிப்பில் உருவான அன்னபூரணி படத்துக்கு எதிராக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ‘அன்னபூரணி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வந்தது.

இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறவில்லை. ஏனெனில் இப்படம் வெளியான 2 நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் ஏற்பட்டு மின்சாரங்கள் பாதிக்கப்பட்டது.

மக்களால் திரையரங்குகளுக்குச் செல்லமுடியாமல் போனதன் காரணமாக இப்படம் வசூல் ரீதியாகச் சரிவைக் கண்டது. இந்நிலையில் இப்படம் டிசம்பர் 29 ஆம் தேதி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் இந்த மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

அதாவது படத்தில் சிறந்த சமையல் கலைஞராக நடிகை நயன்தாரா மாற நினைப்பார். அவர் சிறந்த சமையல் கலைஞராக மாறினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் முடிவு.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. நடிகர் நயன்தாரா-ஜெய் இடையேயான ஒரு காட்சியில் நடிகர் ஜெய் கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டார் என கூறியுள்ளார்.

அதாவது ‛‛ராமாயணத்தை வால்மீகி எழுதியுள்ளார். அதில் வனவாசத்தின்போது ராமன், லட்சுமணன் ஆகியோர் வேட்டையாடிய உணவை சீதாவுடன் சாப்பிட்டனர். அதனால் ராமன் விஷ்ணுவின் அவதாரம் இல்லை என சொல்லி விட முடியுமா?’’ என்பன போன்ற வசனங்கள் இடம்பெற்றிருந்தது.

அதோடு அர்ச்சகரின் மகளாக இருந்து கொண்டு நமாஸ் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பை எல்டி பார்க் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய், இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஜாதின் சேதி ரவீந்திரா புனித் கோனேகா ஜீ ஸ்டியோஸ் தலைமை அதிகாரி ஷாரிக் படேல், நெட்பிளிக்ஸ் இந்திய தலைமை அதிகாரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரை தொடர்ந்து தற்போது மும்பை போலீசார் அன்னபூரணி படத்துக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags: nayantharaCaseannapoorani film
ShareTweetSendShare
Previous Post

கேப்டவுன் ஆடுகளம் சரியில்லை : 1 புள்ளி அபராதம்!

Next Post

“நீ அடிச்ச மட்டும் சிக்ஸா ” : விஜய் கிரிக்கெட் விளையாடும் வீடியோ!

Related News

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies