நயன்தாராவின் அன்னபூரணி படத்திற்கு எதிராக வழக்கு பதிவு!
Sep 12, 2026, 01:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நயன்தாராவின் அன்னபூரணி படத்திற்கு எதிராக வழக்கு பதிவு!

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 04:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் நடிப்பில் உருவான அன்னபூரணி படத்துக்கு எதிராக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ‘அன்னபூரணி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வந்தது.

இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறவில்லை. ஏனெனில் இப்படம் வெளியான 2 நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் ஏற்பட்டு மின்சாரங்கள் பாதிக்கப்பட்டது.

மக்களால் திரையரங்குகளுக்குச் செல்லமுடியாமல் போனதன் காரணமாக இப்படம் வசூல் ரீதியாகச் சரிவைக் கண்டது. இந்நிலையில் இப்படம் டிசம்பர் 29 ஆம் தேதி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் இந்த மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

அதாவது படத்தில் சிறந்த சமையல் கலைஞராக நடிகை நயன்தாரா மாற நினைப்பார். அவர் சிறந்த சமையல் கலைஞராக மாறினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் முடிவு.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. நடிகர் நயன்தாரா-ஜெய் இடையேயான ஒரு காட்சியில் நடிகர் ஜெய் கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டார் என கூறியுள்ளார்.

அதாவது ‛‛ராமாயணத்தை வால்மீகி எழுதியுள்ளார். அதில் வனவாசத்தின்போது ராமன், லட்சுமணன் ஆகியோர் வேட்டையாடிய உணவை சீதாவுடன் சாப்பிட்டனர். அதனால் ராமன் விஷ்ணுவின் அவதாரம் இல்லை என சொல்லி விட முடியுமா?’’ என்பன போன்ற வசனங்கள் இடம்பெற்றிருந்தது.

அதோடு அர்ச்சகரின் மகளாக இருந்து கொண்டு நமாஸ் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பை எல்டி பார்க் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய், இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஜாதின் சேதி ரவீந்திரா புனித் கோனேகா ஜீ ஸ்டியோஸ் தலைமை அதிகாரி ஷாரிக் படேல், நெட்பிளிக்ஸ் இந்திய தலைமை அதிகாரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரை தொடர்ந்து தற்போது மும்பை போலீசார் அன்னபூரணி படத்துக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags: nayantharaCaseannapoorani film
Share
Tweet
SendShare
Previous Post

கேப்டவுன் ஆடுகளம் சரியில்லை : 1 புள்ளி அபராதம்!

Next Post

“நீ அடிச்ச மட்டும் சிக்ஸா ” : விஜய் கிரிக்கெட் விளையாடும் வீடியோ!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies