உலகமே இந்தியாவை முக்கியத் தூணாகப் பார்க்கிறது: பிரதமர் மோடி!
Jan 14, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகமே இந்தியாவை முக்கியத் தூணாகப் பார்க்கிறது: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 10, 2024, 04:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகமே இந்தியாவை ஸ்திரத்தன்மையின் முக்கியத் தூணாகப் பார்க்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் ‘வைபிரன்ட் குஜராத்’தின் 10-வது மாநாடு இன்று தொடங்கியது. “வைபிரன்ட் குஜராத்” 20 வருட வெற்றியின் மாநாடாக இது கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, இந்த “வைபிரன்ட் குஜராத்” மாநாடு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாடு 12-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில், 36 கூட்டாளர் நாடுகளும், 16 கூட்டாளர் அமைப்புகளும் கலந்துகொண்டிருக்கின்றன. இம்மாநாட்டை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து பேசுகையில், “சமீபத்தில்தான் இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தன.

இதையடுத்து, ​​100 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் நேரத்தில், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நாங்கள் கொண்டிருக்கிறோம். எனவே, அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா தனது இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறது.

இந்த 25 ஆண்டுகள் இந்தியாவின் அமிர்த காலமாகும். இந்த அமிர்த காலத்தில் குஜராத்தில் முதல் உலக உச்சி மாநாடு நடைபெறுகிறது. ஆகவே, இது இன்னும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான பங்காளிகள்.

இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் பங்கேற்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சி மாநாட்டில் ஷேக் முகமது பின் சயீத் தலைமை விருந்தினராக கலந்துகொள்வது இந்தியாவிற்கும் ஐக்கிய அரசு அமீரகத்துக்கும் இடையே இருக்கும் வலுவான உறவைக் குறிக்கிறது.

உலகமே இந்தியாவை ஸ்திரத்தன்மையின் முக்கியத் தூணாகப் பார்க்கிறது. நம்பக்கூடிய ஒரு நண்பர், மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட ஒரு பங்குதாரர், உலகளாவிய நன்மையை நம்பும் ஒரு குரல், உலகப் பொருளாதார வளர்ச்சியின் இயந்திரம், தீர்வுகளைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப மையம், திறமையான இளைஞர்களின் சக்தி மற்றும் ஜனநாயகத்தை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

ஐக்கிய அரசு அமீரக நிறுவனங்களால் இந்தியாவின் துறைமுக உள்கட்டமைப்பில் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள புதிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. இன்று, இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா 11-வது இடத்தில் இருந்தது.

இன்று, அனைத்து முக்கிய ஏஜென்ஸிகளும் இந்தியா, வரும் ஆண்டுகளில் உலகின் முதல் 3 பொருளாதாரங்களில் இருக்கும் என்று மதிப்பிடுகின்றன. அது நடக்கும் என்று உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: PM ModiVibrant Gujarat Summitaddresses
ShareTweetSendShare
Previous Post

தங்கத்தில் கதவுகள் – அயோத்தியில் ஒரு அசதியம்!

Next Post

முதல் முறையாக மலைகிராம வீடுகளில் வெளிச்சம் – மோடியின் மற்றொரு சாதனை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies