உலகமே இந்தியாவை முக்கியத் தூணாகப் பார்க்கிறது: பிரதமர் மோடி!
Jul 2, 2025, 12:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகமே இந்தியாவை முக்கியத் தூணாகப் பார்க்கிறது: பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Jan 10, 2024, 04:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகமே இந்தியாவை ஸ்திரத்தன்மையின் முக்கியத் தூணாகப் பார்க்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் ‘வைபிரன்ட் குஜராத்’தின் 10-வது மாநாடு இன்று தொடங்கியது. “வைபிரன்ட் குஜராத்” 20 வருட வெற்றியின் மாநாடாக இது கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, இந்த “வைபிரன்ட் குஜராத்” மாநாடு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இம்மாநாடு 12-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில், 36 கூட்டாளர் நாடுகளும், 16 கூட்டாளர் அமைப்புகளும் கலந்துகொண்டிருக்கின்றன. இம்மாநாட்டை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து பேசுகையில், “சமீபத்தில்தான் இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தன.

இதையடுத்து, ​​100 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் நேரத்தில், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நாங்கள் கொண்டிருக்கிறோம். எனவே, அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா தனது இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறது.

இந்த 25 ஆண்டுகள் இந்தியாவின் அமிர்த காலமாகும். இந்த அமிர்த காலத்தில் குஜராத்தில் முதல் உலக உச்சி மாநாடு நடைபெறுகிறது. ஆகவே, இது இன்னும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான பங்காளிகள்.

இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் பங்கேற்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ‘வைப்ரன்ட் குஜராத்’ உச்சி மாநாட்டில் ஷேக் முகமது பின் சயீத் தலைமை விருந்தினராக கலந்துகொள்வது இந்தியாவிற்கும் ஐக்கிய அரசு அமீரகத்துக்கும் இடையே இருக்கும் வலுவான உறவைக் குறிக்கிறது.

உலகமே இந்தியாவை ஸ்திரத்தன்மையின் முக்கியத் தூணாகப் பார்க்கிறது. நம்பக்கூடிய ஒரு நண்பர், மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட ஒரு பங்குதாரர், உலகளாவிய நன்மையை நம்பும் ஒரு குரல், உலகப் பொருளாதார வளர்ச்சியின் இயந்திரம், தீர்வுகளைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப மையம், திறமையான இளைஞர்களின் சக்தி மற்றும் ஜனநாயகத்தை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

ஐக்கிய அரசு அமீரக நிறுவனங்களால் இந்தியாவின் துறைமுக உள்கட்டமைப்பில் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள புதிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. இன்று, இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா 11-வது இடத்தில் இருந்தது.

இன்று, அனைத்து முக்கிய ஏஜென்ஸிகளும் இந்தியா, வரும் ஆண்டுகளில் உலகின் முதல் 3 பொருளாதாரங்களில் இருக்கும் என்று மதிப்பிடுகின்றன. அது நடக்கும் என்று உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: PM ModiVibrant Gujarat Summitaddresses
ShareTweetSendShare
Previous Post

தங்கத்தில் கதவுகள் – அயோத்தியில் ஒரு அசதியம்!

Next Post

முதல் முறையாக மலைகிராம வீடுகளில் வெளிச்சம் – மோடியின் மற்றொரு சாதனை!

Related News

பீகார் ரயில் நிலையத்திற்கு வெளியே தேங்கிய மழைநீர் – பயணிகள் அவதி!

ஆஸ்திரியா : கனமழையால் பயங்கர நிலச்சரிவு – மக்கள் தவிப்பு!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

“Sorry” என முதல்வர் சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

உத்தரபிரதேசம் : யமுனை நதியின் நீர்மட்டம் அதிகரிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

பொன்னேரி அருகே திருமணமான 4 நாட்களில் வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் தற்கொலை – கணவர், மாமியார் கைது!

8 நாட்கள், 5 நாடுகள் – வெளிநாடு புறப்பட்டார் பிரதமர் மோடி!

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்!

திருத்தணி முருகன் கோயிலில் ரூ. 2 கோடி உண்டியல் காணிக்கை!

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் திமுக அரசு – இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் குற்றச்சாட்டு!

சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பார்க்கிங் கட்டணம் வசூல் – பக்தர்கள் குற்றச்சாட்டு!

தரமான கல்விதான் வளமான பொருளாதாரத்தின் அடித்தளத்தை கட்டமைக்கும் – சுவாமி விக்ஞானந்தா

மதுரையில் அர்ச்சனை தட்டு வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் – திமுக எம்பி மகனை தாக்கியதாக இருவர் கைது!

சென்னையில் பாஜக ஆர்பாட்டம் – நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்!

திருச்செந்தூர் முருகன் கோயில் யாகசாலை பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies