பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத்துக்கு 78 ஆண்டு சிறை: ஐ.நா.!
Aug 18, 2025, 09:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத்துக்கு 78 ஆண்டு சிறை: ஐ.நா.!

Web Desk by Web Desk
Jan 10, 2024, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2008 மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கருதப்பட்ட நிலையில், அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 78 ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருப்பதாக ஐ.நா. தெரிவித்திருக்கிறது.

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 161 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

எனினும், இத்தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவன் பாகிஸ்தானின் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத். ஆகவே, ஹபீஸ் சயீத்தை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்தது. மேலும், அமெரிக்காவும், ஐ.நா.வும் அவனை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தன.

இந்த சூழலில், ஒரு வழக்கு விசாரணைக்காக, ஹபீஸ் சயீத்தை நாடு கடத்துமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. ஆனால், அவனை நாடு கடத்த பாகிஸ்தான் மறுத்து விட்டது. இதனிடையே, தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவி செய்த குற்றத்திற்காக ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவின் திருத்தப்பட்ட பட்டியலின்படி, 2020 பிப்ரவரி 12-ம் தேதி முதல் ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் அதிகாரிகளின் காவலில் உள்ளதாகவும், 7 தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த குற்றத்திற்காக, அவன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு 78 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இப்பட்டியலின் மாற்றங்களின் லஷ்கர் இ தொய்பாவின் நிறுவன உறுப்பினரும், சயீத் கூட்டாளியுமான ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவியின் மரணத்தையும் கமிட்டி சரி செய்திருக்கிறது. 2008 மும்பைத் தாக்குதலில் தீவிரவாதிகளை தயார்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய புத்தாவி, கடந்த ஆண்டு மே மாதம் சிறையில் இறந்தான். இவற்றுடன் சொத்து முடக்கம், பயணத் தடை மற்றும் ஆயுதக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட நபர்கள் மற்றும் வணிகங்களின் பட்டியலை பாதுகாப்பு கவுன்சில் குழு சமீபத்தில் புதுப்பித்திருகிறது.

Tags: pakistanHafiz Saeed78 years sentenced
ShareTweetSendShare
Previous Post

“தி கோட்” படத்தின் ரிலீஸ் தேதி – வெளியான தகவல்!

Next Post

கல்லூரி மாணவிகளுடன் கலந்ரையாடிய அண்ணாமலை!

Related News

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

Load More

அண்மைச் செய்திகள்

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies