பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத்துக்கு 78 ஆண்டு சிறை: ஐ.நா.!
Oct 26, 2025, 02:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத்துக்கு 78 ஆண்டு சிறை: ஐ.நா.!

Web Desk by Web Desk
Jan 10, 2024, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2008 மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கருதப்பட்ட நிலையில், அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 78 ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருப்பதாக ஐ.நா. தெரிவித்திருக்கிறது.

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 161 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

எனினும், இத்தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவன் பாகிஸ்தானின் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத். ஆகவே, ஹபீஸ் சயீத்தை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்தது. மேலும், அமெரிக்காவும், ஐ.நா.வும் அவனை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தன.

இந்த சூழலில், ஒரு வழக்கு விசாரணைக்காக, ஹபீஸ் சயீத்தை நாடு கடத்துமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. ஆனால், அவனை நாடு கடத்த பாகிஸ்தான் மறுத்து விட்டது. இதனிடையே, தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவி செய்த குற்றத்திற்காக ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவின் திருத்தப்பட்ட பட்டியலின்படி, 2020 பிப்ரவரி 12-ம் தேதி முதல் ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் அதிகாரிகளின் காவலில் உள்ளதாகவும், 7 தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த குற்றத்திற்காக, அவன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு 78 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இப்பட்டியலின் மாற்றங்களின் லஷ்கர் இ தொய்பாவின் நிறுவன உறுப்பினரும், சயீத் கூட்டாளியுமான ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவியின் மரணத்தையும் கமிட்டி சரி செய்திருக்கிறது. 2008 மும்பைத் தாக்குதலில் தீவிரவாதிகளை தயார்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய புத்தாவி, கடந்த ஆண்டு மே மாதம் சிறையில் இறந்தான். இவற்றுடன் சொத்து முடக்கம், பயணத் தடை மற்றும் ஆயுதக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட நபர்கள் மற்றும் வணிகங்களின் பட்டியலை பாதுகாப்பு கவுன்சில் குழு சமீபத்தில் புதுப்பித்திருகிறது.

Tags: pakistanHafiz Saeed78 years sentenced
ShareTweetSendShare
Previous Post

“தி கோட்” படத்தின் ரிலீஸ் தேதி – வெளியான தகவல்!

Next Post

கல்லூரி மாணவிகளுடன் கலந்ரையாடிய அண்ணாமலை!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies